Monday, July 7, 2014

உங்களுக்குத் தெரியுமா?

பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர்  தமிழக முதலமைச்சர் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  இங்கே ஒவ்வொரு விதிமுறைகளும், சட்டத்திருத்தங்களும் கொண்டு வருவதற்கு பல பெண்களின் உயிர்த்தியாகங்களும், பெருந்திரள் போராட்டங்களும் தேவையாக இருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இப்படித்தான் நிர்பயாவின் படுகொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.

 என்ன சொல்கின்றது விடுதிகளுக்கான விதிமுறைகள்:

எல்லா விடுதிகளிலும் கட்டயமாக கண்காணிப்புக் கருவி

50 மகளிர்க்கு ஒரு மகளிர் காவலாளி

விடுதியில் 24 மணி நேர காவலாளி கண்காணிப்பு  போன்றவையே அவை.

அது மட்டுமின்றி சில பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாவட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், ராணுவத்தினர்களைக் கணக்கு எடுத்து, அவர்களைக் காவலாளிகளாக பணியில் அமர்த்தலாம்

காவாலாளியாக பணிக்க‌மர்த்தும் முன் அவர்கள் பார்த்த பணிகளின் வரலாறு, அரசு மருத்துவரின் மன நலச் சான்று, காவல் துறையின் ஒழுக்கச்சான்றும் பெற வேண்டும்.  

மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் கண்கானிக்க வேண்டும், விடுதிகளின் பட்டியல் வைத்திருக்க வேண்டும். காவல் துறையினர் விடுதிகளை மாதம் ஒரு முறைப் பார்வையிட வேண்டும்.

பெண்கள் தங்கிருக்கும் எல்லா அரசு, தனியார், பள்ளி, கல்லூரி, அறக்கட்டளை, தொழிற்சாலை மற்றும் நிறுவனம் நடத்தும் விடுதிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

  2 சிறுமிகள் விடுதியிலிருந்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட‌ பின்னர் தான் இந்த விதிமுறை வந்துள்ளது , இது போன்ற விதிமுறைகள் இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கவே  உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு விதிமுறைகள் வெளியானது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் விடுதிகளில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா?


--
சமந்தா

No comments:

Post a Comment