Wednesday, May 28, 2014

‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்'

இன்று (புதன், 28 மே 2014) காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.



அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் கண்டித்தும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க.,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 'தாய் மொழி வழிக் கல்வி'யை ஆதரித்து 'சேவ் தமிழ்சு இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் தோழர்.செந்தில் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.





போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

'அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டத்தில்' கலந்து கொண்ட தோழர்கள் காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

போராட்ட முழக்கங்களின் ஒலிப்பதிவு:
http://yourlisten.com/savetamilsmovement/muzhakkam

தமிழ்வழிக் கல்வி குறித்து ஏற்கெனவே எமது வலைப்பூவில் வெளியான இடுகை:

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?

No comments:

Post a Comment