Sunday, May 25, 2014

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

தகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

ஒப்பனை
• சேவ் தமிழ்ஸ் தோழர்(இனி.. தோழர்) - தோழர் ராஜன்
• அறை நண்பர் - தோழர் சதிஸ்
• தகவல் தொழில்நுட்ப நண்பர் - தோழர் அருணகிரி
• வடமாநில நண்பர் - தோழர் கேசவன்

காட்சி 1 (தங்கியிருக்கும் அறையில்)



தோழர் - மாப்ள! நாளைக்கு ஊருக்கு போறேன். நீ ஹவுஸ் ஓனர பாத்து இந்த வாடகைய கொடுத்துரு.

அறை நண்பர் - மச்சி, சாயங்காலம், ஓனர் வீட்டு வழியா தான போவ..? நீயே கொடுக்க வேண்டிய தான...

தோழர் -என்னடா மறந்துட்டியா? சாயங்காலம் நினைவேந்தல் இருக்குன்னு சொன்னேன்ல... இந்த தடவ கண்டிப்பா வாரேன்னு சொன்னியேடா

அறை நண்பர் -டேய்! அது உன்ன ஆறுதல் படுத்த சொன்னதுடா! ஓ அத நீ சீரியஸா எடுத்துகிட்டியா? ஐயோ ஹையோ...

தோழர் -நீ வந்து பாரேண்டா, வர்றதுல உனக்கு என்ன ஆகபோகுது?

அறை நண்பர் - டேய் யப்பா அதெல்லாம் உங்கூடவே வச்சிக்க..., என்ன ஆள விடு. உன்னை ஒரு நாள் இல்ல, ஒரு நாள் Terrosistன்னு சொல்லி உள்ள வைக்க போறாய்ங்க. ஏன்கிட்ட வந்து விசாரிச்சா சொல்லிருவேன்.... உன்ன பாத்தது கூட இல்லன்னு...

தோழர் -அட பாவி! லச்சகணக்கில கொன்னானுங்க, இன்னைக்கும், ராணுவத்த உள்ள உட்டு உதைக்கிறான், இருக்குற வீட்ட புடுங்குறான். இதல்லாம் சொன்னா உனக்கு நான் Terrorist அங்?

அறை நண்பர் - இந்தியாவுல இருந்துகிட்டு ஒன்னும் கிழிக்கமுடியாது. நீங்க ரெண்டு பேரு மூணு பேரு கத்துறதால எல்லாம் சரியாயிடுமா?


தோழர் -இப்படியே சொல்லிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது, இன்னக்கி நீ வருவ.... நாளைக்கு அவன் வருவான்... அதோ வேடிக்கை பார்க்குறாரே அவர் (மக்களை நோக்கி கையை காட்டி), எல்லாரும் சேந்து கத்துவோம். ஈழம் ஒன்னும் கேட்டவார்த்தை இல்லயே; நியாயம் தான கேட்கிறோம்.

அறை நண்பர் -சரிங்க தோழரே (நக்கலாக), கிளம்புங்க காத்து வரட்டும்!
[முனுமுனுப்பு - சே!அந்த பையன் இவ்வளவு சொல்லியும், இவன் அலச்சியபடுத்துறானே]


தோழர் -இதுல ஆறாயிரம் வச்சிருக்கேன் மறந்துறாத, நாளைக்கு ஓனர்ட்ட கொடுத்துடு, முடிஞ்சா சாயங்காலம் வரப்பாரு.


(போர்வையில் மூடிகிட்டு)
அறை நண்பர் -குட் நைட்!



காட்சி - 2 (அலுவலகத்தில்)


தோழர் -வணக்கம் அருண்!

அலுவலக நண்பர்(இனி.. நண்பர்) -வாங்க தமிழ் புலவரே!

தோழர் -ஒரு தடவ இரண்டு தடவன்னா பரவாயில்ல, எப்பவும் கிண்டல் பண்ணுனா எனக்கே அலுத்து போயிருது. வணக்கம் சொன்னது குத்தமாயா?

நண்பர் -ஜி என்ன கோவப்பட்டுடீங்களா? சும்மா ஒரு விளையாட்டுக்குதானஜி

தோழர் - கிளைண்டுட்ட இருந்து மெயில் வந்துச்சா?

நண்பர் -இல்லஜி, மறுபடியும் இன்னக்கி ஒரு மெயில் தட்டிவிடனும்போல. ஒழுங்கா பதிலும் சொல்ல மாட்டான், அப்புறம் இந்தாளு புடிச்சி நம்மள ஏறுவார்.

தோழர் -சொல்லிகிலாம் விடுங்க! இன்னைக்கு சாயுங்காலம் நினைவேந்தல் இருக்குனு சொன்னனே, வந்துருங்க தல!

நண்பர் -ஜி நான் வந்து என்ன செய்ய போறேன். எனக்கும் சேத்து நீங்களே கலந்துகோங்க!

தோழர் -அது என்ன எல்லாருக்கும், கடைசி நேரத்துல ஏதாவது ஆயிருது. ரூம்ல ஒருத்தன் கிடக்கான், அவனும் இப்படி தான் சொன்னான்.

நண்பர் -ஜி, இது நினைவேந்தல் தான், அப்பிடின்னா கூட எனக்கு இந்த கான்சப்டே புரியவே இல்ல, இங்கிருந்து ஒரு நாட்டுக்கு பிழைக்க போயி அங்க தனி நாடு கேக்கிறது எப்படி?

தோழர் -நீ யார சொல்ற... பிழைக்க போனாங்கனுட்டு?

நண்பர் -எனக்கு தெரிஞ்சி, சிங்களவன் தான் அங்க இருந்தான், நம்மாளுங்கள பிரிட்டிஸ்க்காரன் டீ எஸ்டேட்டுக்கு வேலைக்கு கூட்டிபோனான்....

தோழர் -என்னது...? நீங்க சொல்றது வெள்ளகாரகாரங்க இங்க ஆட்சி செய்யும் பொது, இங்கிருந்து போன தமிழர்கள், இன்னும் மலையக தமிழர்களா இருக்காங்க!

நண்பர் -அப்போ அதுக்கு முன்னாடியே அங்க தமிழர்கள் இருந்தாங்களா?

தோழர் -தமிழ் மன்னர்கள் அங்கு முன்பே ஆட்சி செஞ்சிருக்காங்க, தமிழ் மக்கள் அந்த மண்ணின் பூர்வ குடிகள்! அருண்.

நண்பர் -ஜி.. இது தெரியாதே

தோழர் -இதுக்கு தான் "வெடித்த நிலத்தில் வேர்களை தேடி"ங்குற டி.வி.டி'ல ஈழ வரலாற்றை விளக்குற ஆவணப்படம் ஒன்ன தந்தேன். நீங்க என்னன்னா...? நல்ல காசு பாக்குறீங்க போல அப்படின்னு சொல்லி கலாய்சீங்க... நல்லா தேடி படிங்க... நம்மளே இப்படி சொல்லலாமா?

நண்பர் -நான் பாக்குறேன் ஜி...

தோழர் -நல்லது, பாருங்க... முழுசா தெரியாம நீங்களே ஒரு கற்பனைக்கு வராதீங்க!..... அப்புறம் தல முடிஞ்சா இன்னைக்கு வாங்க!

நண்பர் -ட்ரை பண்ணுறேன் ஜி

தோழர் -தனது பையில் இருந்து டி.வி.டி'ய எடுத்து கொடுக்குறார்.

நண்பர் -எவ்வளவு ஜி (சிரித்து கொண்டே)
(டி.வி.டி'யை எடுத்து உள்ளே வைத்துவிட்டு...)

தோழர் -யூடுயூப்'ல இருக்கு, 'வெடித்த நிலத்தில் வேர்களை தேடி' என்று தேடி பாருங்க... முதல்ல நான் போயி சாயங்காலம் போறதுக்கு permission வாங்கிட்டு வாரேன்.

நண்பர் - கிளம்பும் போது தல வலின்னு..., வயித்து வலின்னு எதையாவது சொல்லிட்டு போக வேண்டியது தான?

தோழர் - இல்ல நான் நினைவேந்தல்'ன்னு சொல்லியே கேட்கபோறேன்...

நண்பர் - சரி... இன்னக்கி ஹிந்தில திட்டுவாங்கனும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க... என்சாய்


காட்சி - 3(Team Manager Room)


STM member: Good Morning ATUL

ATUL(TL) - Good Morning yaar, please sit... anything?

STM member - Had no email response from the client...

ATUL(TL) - Yeah... they are lazy guys, we will wait up to evening. Then we can setup a call.

STM member - ok (நாசமா போச்சு), huh.... one more thing.

ATUL - Yeah

STM member - We are paying homage to Tamils killed in the Genocide, this evening. I told you.., remember? Today is May 19 !

ATUL -yes! it's really pathetic yaar that thousands of people were killed in the war, But demanding Eelam is like you want to separate Tamil nadu from India. Don't you?


STM member - No Atul! You misunderstood. Eelam is not a demand to separate Tamil Nadu from India.

ATUL -Then..?

STM member - Eelam is a historical land mass in the now island nation, Sri Lanka belongs to Tamils. Now it is a freedom chant to form of Separate country there. It’s like a liberation of South Sudan …happened in 2011.. You know it, right?

ATUL -Yeah .. I read about Sudan. By the way , Does Eelam include Tamil Nadu as well ?

STM member - No... No … No.. The north Indian Medias are trying to create such stories like "Tamilnadu will be separated if Eelam is free". It is not so !


ATUL - Oh... is it ? Even I thought the same... okay then, some where I read it is war against Terrorism and Sri Lankan army rescued Tamil people from the terrorists.. Is it not so ?

STM Member :Its false propaganda. If it is war against Terrorism , why thousands of Tamils killed ? why did the army shelled in No Fire zone ? You please read more in UN panel reports and Channel 4 videos

ATUL -Is it ? … (pause) I think we need to discuss a lot about eelam. May be we can discuss this Saturday night.

STM Member:Sure … we can discuss more on Saturday


ATUL:All right! Please setup a call in the afternoon and you can leave.

STM member - Thanks Atul! You're welcome there, if you are interested.

ATUL -I have a report to take care yaar, I will try.


STM member - :-)


காட்சி - 4 (நினைவேந்தல் நிகழ்வு)

தோழர் - என்னடா! வரமாட்டேன்னு சொன்ன?

அறை நண்பர் -விடு விடு... அதான் வந்துட்டோம்ல.... இலட்சம் பேர் செத்ததுக்கு அஞ்சலி கூட பண்ணலான எப்படி ?

தகவல் தொழில்நுட்ப நண்பர் -ஹாய் ஜி

தோழர் -வாங்க ஜி... வாங்க ஜி...

தகவல் தொழில்நுட்ப நண்பர் -இங்க பாரு.... யாரு வந்துருக்குறதுன்னு!

தோழர் -Hey Atul, its a surprise man... great.

ATUL -Its okay yaar.

தோழர் - இன்னக்கி ஒங்களுக்குலாம் என்னாச்சி...

தகவல் தொழில்நுட்ப நண்பர் -நான் கூட அவன பல நாள் சப்பாத்தின்னு கிண்டல் பண்ணிருகேன்... இன்னக்கி கூப்ட உடனே நானும் வரணும்னு தான் இருந்தேன் அப்படின்னான்

தோழர் - தமிழரின் தாகம்...
(தகவல் தொழில்நுட்ப நண்பர் மற்றும் அறை நண்பர் முழக்கமிட)

ATUL -what does it mean?


தோழர் -The thirst of Tamils is tamil eelam homeland

ATUL -Repeat in Tamil...

தோழர் -தமிழரின்-தாகம்... தமிழீழ- தாயகம்.(மெதுவா சொல்லி கொடுக்க)
தமிழரின் தாகம்...அனைவரும் - தமிழீழ தாயகம்.



-----

No comments:

Post a Comment