Monday, March 24, 2014

இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

செய்திக் குறிப்பு
இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி
சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

நாள் : 24 - மார்ச்சு ,2014 ( திங்கட்கிழமை) | காலை 11 மணியளவில்
இடம் : சென்னை ஆளுநர் மாளிகை அருகில்


இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது புரிந்த இனப்படுகொலை , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , போர்க்குற்றங்கள் மீதான சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு ஆணையம் அமைத்திட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசு உடனடியாக வகை செய்ய வலியுறுத்தியும், கடந்த இரண்டு ஆண்டு தீர்மானங்களை இந்தியா நீர்த்து போகச் செய்து இலங்கையை பாதுகாத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. அவ்வாறு இந்த ஆண்டு தீர்மானத்தில் இந்தியா எந்தவித நீர்த்துப் போகச் செய்யும் வேலையையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் 18 தமிழக அரசியல் இயக்கங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், அமைப்புகள்:

தோழர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலை கழகம் ,
தோழர் கோவை இராமகிருஷ்னன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
எஸ்.டி.பி.ஐ
தோழர் செல்வி தமிழ்நாடு மக்கள் கட்சி ,
தோழர் பொழிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ,
தோழர் செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்
தோழர் சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
மாணவர் இளையராஜா, தமிழ்நாடு மாணவர் இயக்கம்
மாணவர் தினேஷ், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு,
மேலும் தமிழ்த் தேச மக்கள் கட்சி , தமிழர் குடியரசு முண்ணனி , கம்யூனிஸ்டு கட்சி ( மா.லெ.) மக்கள் விடுதலை , தமிழ்நாடு , காஞ்சி மக்கள் மன்றம் , தமிழர் எழுச்சி இயக்கம் , அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் , சேவ் தமிழ்ஸ் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ச.இளங்கோவன், +91 98844 68039
செய்தி தொடர்பாளர் - சேவ் தமிழ்ஸ் இயக்கம்







No comments:

Post a Comment