Wednesday, March 5, 2014

அம்மா அவள் தான் முதன்மையானவளாம்!- உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -2


அம்மா

அவள் தான்

முதன்மையானவளாம்!



அவள்

அரவணைப்பில்தான்

பூமிப்பந்தே

பூத்துக்குலுங்கியதாம்

உயிர்திணைகள்

அஃறிணைகள்

சுற்றி...சுற்றி,..

வலம் வருமாம்

செல்லப் பிராணிகளாய்.



பூக்களைச் சொறிந்து

வாழ்த்தின செடிகள்

பழங்களை உலுக்கி

சந்தோசித்தன மரங்கள்

ஓடைகளும் சுனைகளும்

அவ்வாறே!


கலப்பையோ, மண்வெட்டியோ

கண்டுபிடிக்கவே இல்லை

கரடு முரடானது

அவள் பயணம்

ஓய்வேயில்லாமல்.





இயற்கையின்

இம்சை தாளாது

தாயானாள்!

தந்தையானவன்

உறவுகளை

சொல்லி...சொல்லி...

உட்கார வைத்தான்

சிறைக்குள்.

உணர்ச்சிகளை

காட்டி

படுக்க வைத்தான்

கட்டிலில்



திக்கி, திணறி

திமிறவும் வழியற்று

பீறிட்ட அவள் அழுகை

இன்னும் நிற்கவேயில்லை

இன்றும் தொடர்கிறது !




அம்மா

அவள்தான்

முதன்மையானவளா?...


பாரதிதாசன்
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment