Monday, February 24, 2014

தலைப்புகள் அவசியமற்ற தொகுப்புகள்...


சுதந்திரப்போர்

சூட்சமம்

இரவி பியாஸ்

நதிக்கரை

பகத் சிங்கின் தோழர்கள்

படைத்தவனையே

சோதித்தது

வெடிகுண்டு

பகவதி சரண்!!!




நாளின் மௌனம்

நடக்க மறுத்த

மரணம்!

தண்ணீரில் தகனம்

தவணை முறையில்

அச்சுறுத்தும் அதிகாரம்

அலைகளுக்கு

அர்ப்பணித்தாள்

துர்காதேவி!

தேசத்தையும் காதலித்தவள்

கனன்றது காதல்

கம்பீரமாய்…



குறிப்பு : பகவதி சரணும் அவரது மனைவி துர்கா தேவியும், பகத் சிங்குடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். பகத் சிங்கும் மற்ற தோழர்களும் சிறையில் இருந்த பொழுது அவர்களை மீட்க பகவதி சரண், துர்கா தேவி மற்றும் ஆசாத் வெடிகுண்டை தயாரித்தனர். அதை ரவி பியாஸ் நதிக்கரையில் பரிசோதிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடிக்க பகவதி சரண் படுகாயமடைந்தார். அப்பொழுது அடக்குமுறை காரணமாக மருத்துவமனை செல்லவும், மருத்துவரை அழைத்து வரவும் அவர்களால் முடியவில்லை. வேறு வழியின்றி அவரை ரவி பியாஸ் நதிகரையிலையே பாதி உயிருடன் தகனம் செய்தனர்.

காதலை விட தன் தேசத்தின் சுதந்திரமே பெரிது என்பதை நிரூபித்தவர் துர்கா தேவி.

-------


2)
பூக்களை மட்டுமல்ல

சறுகையும் கூட

உச்சத்தில்

உட்காரவைத்து

அழகு பார்க்கும்

காற்றின் தவம்

காதல்!

மானுடத்தின்

முதல் வெற்றியே

உன்னை

வணங்குகிறேன்

ஆல்பாவின்

வரிசையில்

மீண்டும்…

மீண்டும்…!


--பாரதிதாசன்
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment