Friday, February 21, 2014

அறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல - பசுமை தாயகத்திற்கு பதில்






”இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா? “ என்ற தலைப்பில் பசுமை தாயகம் என்ற
அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த திரு. அருள் அவர்கள் பதிவிட்டிருந்த கட்டுரைக்கு விளக்கம் இது.


’ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடர் - மார்ச் 2014 தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். வரும் மார்ச் மாதத்தை முன்னிட்டு தமிழகம் எத்தகைய முழக்கங்களை முன் வைக்க வேண்டும் என்பதில் ஒரு பொது கருத்தை எட்ட வேண்டும் என்பதே அக்கருத்தரங்கத்தின் நோக்கம். அதற்கென்று எழுதப்பட்ட ஆங்கில செய்தியைக் காட்டித் தான் திரு. அருள் அவர்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார். அத்துண்டறிக்கை தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபப்ட்டது. 2009 மே 19 ஆம் தேதி இன அழிப்புப் போர் முற்றுப் பெற்றதிலிருந்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மே 29 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 10 நாட்களில் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு கோரிக்கைகளை முன் வைத்து தமிழகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் போராட்டங்களோ, கோரிக்கைகளோ எழவில்லை.


போர் முடியும் வரை ‘போரை நிறுத்த வேண்டும்’ என்பதே பொதுவில் எல்லோரது கோரிக்கையாகவும் இருந்தது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தான் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு போராட்டங்கள் நடக்கத் தொடங்கின. இதுவே அத்துண்டறிக்கையில் சொல்ல வந்த செய்தி.

எனவே, இத் துண்டறிக்கையில் மே 2009 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் பசுமை தாயகம் என்ற அரசு சாரா நிறுவனம் சார்பில் ஆற்றப்பட்ட உரை பற்றி குறிப்பிடுவது பொருத்தமற்றது என்று கருதுகின்றோம். இதுவே குறிப்பிடாமல் விட்டமைக்கான காரணமே அன்றி அறியாமையோ, இருட்டடிப்போ அல்ல.

//சேவ் தமிழ்சு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளே - ஈழத்தமிழர் விடயத்திலாவது உங்களது சாதிவெறியை மூட்டைக்கட்டி ஓரமாக வையுங்கள்” என்ற கடைசி வரிகளில் இருந்து அவர் தம் கவலையை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. //

ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் உறுதியாக நிற்கும் ஓர் அமைப்பு எவரது அறியாமை, இருட்டடிப்புகள் குறித்தும் கவலை கொள்ள தேவையில்லை. மற்றபடி, ’சாதிவெறி’ என்று அவர் குறிப்பிட்டது இது வரை, தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் எங்கள் இயக்கம் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளைப் பாராட்டி தரப்பட்ட பட்டமாகவே கருதுகின்றோம்.

செந்தில்
ஒருங்கிணைப்பாளர்.
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment