Tuesday, July 16, 2013

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்

ஈவ் - டீசிங்கால் இறந்து போன சரிகா ஷா..

ஆசிட் தாக்குதலில் கொல்லப்பட்ட வித்யா..

டெல்லி பாலியல் வன்முறைக்கு பலியான நிற்பயா ...

இவை நாம் அன்றாடம் எதிர்கொண்டு வரும் பாலியல் வன்முறைகளில் உலகிற்கு தெரிய வந்த சில.


இவற்றைப் பத்திரிக்கைகளில் படிக்கும் போது அனுதாபமும், கோபமும், இயலாமையும் சேர்ந்த ஓர் உணர்ச்சி நம் நெஞ்சில் எழுகிறது. இதை ஒப்பிடும் பொழுது வீட்டில், தெருவில், பேருந்தில், வேலை செய்யும் இடத்தில் பார்வையால், உடல் உரசல்களால், அத்துமீறிய பேச்சுக்களால் நம் மீது தொடுக்கப் படும் பாலியல் வன்முறைகள் சாதாரணமானவையாக ஆகிவிடுகின்றன.



ஆனால், இந்த சமூகமோ பெண்களைப் பார்த்து இப்படியெல்லாம் அறிவுரை கூறுகிறது.

”பெண்கள் இரவு நேரத்தில் தனியா வெளியில போகக் கூடாது.
பெண்கள் போடும் அரைகுறை ஆடைதான் இதுக்கெல்லாம் காரணம்.
இவுங்கதான் தூண்டுறாங்க”


பல நேரங்களில் நாமும் இது தான் ’சரி’ என்று கடந்து போகிறோம். குற்றம் செய்பவர்களை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவரைக் குற்றஞ் சொல்லும் விசித்திரம் பெண்களுக்கு மட்டுமே நேர்கின்றது. பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த பாகுபாடு தொடர்கின்றது. நவீனத் துறைகளைச் சார்ந்த அலுவலகங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. பதவி உயர்வு, வெளிநாட்டுப் பயணம், திறன் மதிப்பீடு(performance appraisal) என்று எல்லாவற்றிலும் பாகுபாடு.பெண் ஆணுக்கு சமம் இல்லை என்பது மட்டுமல்ல. பெண் ஆணின் உடைமை. அதாவது, பெண்ணின் உடல், உயிர், சுயசிந்தனை என்று அனைத்தும் ஆணுக்கு கட்டுபட்டது.வீட்டில், சமூகத்தில், வேலை செய்யும் இடத்தில் என ஆணுக்கும்,பெண்ணுக்குமாக நிர்ணயிக்கப்பட்ட தனித்தனி வரையறைகள்(rules),அது உருவாக்கும் பாலினப் பாகுபாடுகள்(gender discrimination), பெண்ணின் மீதான எல்லாவித வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.


இந்நிலையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தில் நமக்கென்று உள்ள பாதுகாப்பு என்ன?

பெண் என்பவள் ஆண் பார்த்து ரசிக்க,ஆணின் சொத்து என கருதும் சமூக உளவியல். இதை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுவதில் உள்ள மனத்தடைகளை உடைத்தெரிவது எப்படி?

என நமக்கு எழும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டறியும் ஒரு சிறு முயற்சியே இந்த கருத்து மற்றும் விவாத அரங்கம்.

வாருங்கள் நண்பர்களே,விடை காண்போம் !

--------------
ஆவணப்படம் திரையிடல், கலந்துரையாடல்

சிறப்பு பேச்சாளர்கள்
அ.மங்கை,பேராசிரியர்,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
ஆர்.கே.ருத்ரன்,உளவியல் மருத்துவர்.
அஜிதா,வழக்கறிஞர்

20-07-2013 | சனிக்கிழமை,மாலை 3-6 வரை
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் | பனகல் பூங்கா எதிரில் | தி.நகர் | சென்னை – 17
ஒருங்கிணைப்பு : பெண்கள் குழு - சேவ் தமிழ்சு இயக்கம் | 9840713315

No comments:

Post a Comment