Monday, May 10, 2010

கொழும்பு இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கப் போவதில்லை - மணிரத்னம்....Mani says "NO" to Srilanka

ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் காட்சிக‌ள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், விழாவில் மணிரத்னம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நாம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்களான சுஹாசினியு‌ம், இயக்குனர் மணிரத்னமும் அன்னையர் தினத்தை முன்னிட்டு 83 பெண்களுக்கு தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னையில் இன்று வழங்கினர்.




இவ்விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிரத்னம், இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நான் பங்கேற்கவில்லை. மேலும், நான் இயக்கிய ராவணன் படத்தின் முழு படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ராவணன் படத்தின் சிறப்புக் காட்சிகளும் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளதே என்று கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் என் படத்தின் நடித்தவர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை‌யி‌ல் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று நான் எப்படி தடுக்க முடியும். அது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் பேகவில்லை, அவ்வளவுதான் என்று பதிலளித்தார்.


மணிரத்னம்,
மிகவும் வரவேற்கத்தக்க முடிவு...தமிழ் உணர்வாளர்களின் சார்பாக எங்களது நன்றி .

No comments:

Post a Comment