Monday, November 15, 2010

Monday, August 30, 2010

UN's Holmes Speaks of Gov't Shelling, Casualties, 2 Sides' Propaganda in Sri Lanka

Asked about Sri Lanka on his final day as UN Humanitarian Coordinator, John Holmes offered a defense of his department's funding of the government's internment camps while admitting the government may have “deliberately shelled” civilians and hospitals.Inner City Press asked Holmes about criticism of his and the UN's actions in Sri Lanka, for example pulling out of Kilinochchi, funding the internment camps and failing even now to get to the bottom of the murder of the Action Contre La Faim humanitarian workers.

http://www.innercitypress.com/sri2holmes082610.html


Thursday, June 10, 2010

ஞாநி அவர்களே! உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா? ....வெ.தனஞ்செயன்

ஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என 'ஒ' பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA - 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார்.

இலங்கை IIFA-2010 ல் தாங்களும் கலந்து கொள்வதில்லை, மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கலந்து கொண்டால் அவர்களின் படங்களை தென் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற முடிவை கீழ்கண்ட, தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கங்களும் இணைந்து கூட்டறிக்கை விடுத்தன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்

இத்தனை சங்கங்களையும் மிரட்டி அடி பணிய வைக்குமளவு பலம் கொண்ட கட்சி தமிழகத்தில் இல்லை என்பது ஞாநி அவர்களுக்குத் தெரியும். ஆளும்தரப்பு இதனை செய்திருக்கும் என்ற சந்தேகம் ஞாநிக்கு வந்திருக்காது என்று நம்புவோம். அப்படி எதாவது கட்சிகள் முயன்றிருந்தால் குறிப்பிட்ட சங்கங்களிடமிருந்து சிறு சலசலப்பாவது எழுந்திருக்கும்.

உண்மையில் ஈழத் தமிழனின் உரிமைக்கான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் படுகொலைகளுடனும், சிறைபிடிப்புகளுடனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்ற வலி ஞாநி போன்ற மேல்தட்டு பத்திரிகையாளர்களையும், சில அரசியல்வாதிகளையும் தவிர்த்து எல்லாருக்குமே இருக்கிறது.

அதனால் தான் IIFA- 2010 ல் கலந்து கொள்வதற்கான அழைப்பை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் தாங்களாகவே புறக்கணித்து இருந்தனர். ஞாநியை போன்ற, ஈழப் பிரச்னையில் தவறான கருத்துடைய பத்திரிகையாளர்களாலும், ஆங்கில செய்தி ஊடகங்களில் ஈழம் பற்றிய இருட்டடிப்பு செய்திகளாலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழும் கொடூரங்கள் வட இந்திய திரைத்துறையையும், மக்களையும் சென்றடையவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி IIFA -2010ல் கலந்து கொள்ளும் இந்தித் திரையுலக பிரபலங்களைக் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டு இங்கிருக்கும் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டறிக்கை என்பவற்றுடன், தனிநபர்களும் திரைத்துறையினர் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பலனாகத் தான் IIFA -2010ல் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் பொலிவிழந்தது.

மற்றபடி எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தங்களது தார்மீகக் கடமைகளை உணர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். என்ன காரணத்தினால் ஞாநி மறந்து போனார் என்று தெரியவில்லை.

அடுத்து 'ஓராண்டுக்கு முன் ஏராளமான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இராஜபக்ஷே அரசு, புலிகள் அமைப்பு இருவரின் தவறான அரசியலுமே காரணம் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கும் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள்' என்று எழுதியுள்ளார். அவர்களின் தவறான அரசியல் மட்டுமா காரணம்?
ஞானியின் மனசாட்சி எப்பொழுதுமே அவரைக் கேள்வி கேட்காது போலும். சிங்கள அரசு பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஈழத்திலிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியேற்றி சாட்சியங்களில்லாமல், எந்தவித போர்நெறிகளையும் பின்பற்றாமல் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் குறைத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி 18 மாதங்களுக்கு மேலாக உணவு, மருந்துப் பொருட்களைத் தடை செய்து மருத்துவமனைகள், மக்கள் வாழும் பாதுகாப்பு வலயம் மீது குண்டு போட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள், போராளிகள் என சகட்டுமேனிக்குப் பாவித்து, இவ்வாறு ஒரு அரசு தனது உள்நாட்டுப் போரை முடிக்க முடியும் என்பது, இந்த நுற்றாண்டின் எவ்வளவு பெரிய கேவலம்.

புலிகள் இயக்கம் எவ்வளவு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களே மக்களை பலவந்தமாக சிறைபிடித்து இருந்தாலும், அந்த மக்களை மீட்கவே இந்தப் போரை நடத்துகிறோம் என சிங்கள அரசு சொன்னாலும், குறைந்தபட்சம் ஒரு தற்காலிக போர் நிறுத்தமாவ‌து ஏற்படுத்தி போர்க்களத்திலிருந்து பொதுமக்களையாவது சர்வதேச சமூகம் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

அந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்திற்கும், அங்கஹீனத்திற்கும், மனச்சிதைவுக்கும், பறிக்கப்பட்ட வாழ்வுக்கும் எதுவுமே செய்ய முடியாத சர்வதேசமும், ஐநாவும், கள்ள மௌனம் சாதித்த இந்தியாவும், நாடகதாரிகளாய் மாறிப்போன அரசியல்வாதிகளை நம்பி, ஒற்றுமையாய்ப் போராடாமல் போன நாங்களும், இத்தகைய அறிவியல் யுகத்திலும் சர்வதேசத்திலிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவு, மருந்து மறுக்கப்பட்டு பதுங்கு குழிக்குள் துரத்தப்பட்ட ஈழ மக்களுக்காக உண்மையை எழுதாத நீங்களும் என நீளும் பட்டியலில் எல்லோரும் குற்றவாளிகள்தான், ஆனால் அதனை அறிய ஞாநியின் மனசாட்சி சுத்தமாக சிந்திக்க வேண்டும்

அடுத்து இந்தக் கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழித்து இப்போது கொழும்பில் இந்திய திரைப்பட விழா நடத்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்புவது அர்த்தமற்றது என்று எழுதியுள்ளார். இலங்கையின் எந்தக் கொடூரங்களும் முடிந்துவிடவில்லை ஞாநி அவர்களே! ஈழ மக்களின் அரசியல் அபிலாஷை எதுவும் நிறைவேறவில்லை. அந்த மக்கள் உரிமை கேட்டதாலே சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கின்றனர். இன்று இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு தெற்கு பிரதேசங்கள் இராணுவ சிறைகளாகவும், அகதி முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் யாரையும் ராணுவம் கைது செய்து, சித்ரவதை செய்யலாம், காணாமல் போகச் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. அங்கு வாழும் எல்லா தமிழனையும் சிங்களத் துப்பாக்கி சந்தேகக் கண்கொண்டு கண்காணித்தபடியே உள்ளது.

இப்பொழுதும் அகதிமுகாம்களில் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திக்க முடியாதபடி உள்ளது. கைது செய்யப்பட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை ஓராண்டு ஆன பின்னரும் செஞ்சுலுவைச் சங்கங்களே சந்திக்க முடியாதபடி நிலைமை உள்ளது.

போரின் போதும், போரின் பின்னும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு அத்தாட்சியாக தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகின்றனர். நடந்த போரில் ஐ.நா.வின் செயலற்ற தன்மையைக் கண்டித்திருப்பதோடு, இதற்கு இலங்கை தண்டிக்கப்படவில்லை என்றால் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்க ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என தொடர்ச்சியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதிலிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது.

இவ்வளவு போர்க்குற்றங்களையும் புரிந்த இராஜபக்ஷே நீங்கள் கூறும் அந்த சாதாரண சிங்களர்களின் வாக்குகளால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, தமிழின சுத்திகரிப்பையும், தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். எனவே ஈழ மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை இலங்கையை தனிமைப்படுத்தும் போராட்டம் தொடரும்.

இனவெறி அரசை தனிமைப்படுத்த இதுபோன்ற முறையைப் பயன்படுத்துவது புதிதல்ல. இனவெறி தென் ஆப்பிரிக்க அரசை வழிக்குக் கொண்டு வர கிரிக்கெட்டில் இருந்து அந்த அணியை விளக்கி வைத்ததும் உதவியது.

மற்றபடி ஈழ தமிழினத்தைத் தேவையில்லாமல் சிங்கள இனத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள் . இவ்வளவு பெரிய இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது. எனவே சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை விட ஒரு சிறந்த வாழ்க்கை இருக்க முடியாது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறோம்.

சிங்கள அரசு தனது போர்க் குற்றத்தை மறைத்து, தமிழர்க்கு எந்த உரிமையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதைத் தடுக்கவே, இது போன்ற புறக்கணிப்புகள். ௦தனிப்பட்ட சிங்களர்கள் மேல் வெறுப்பில்லை. இங்கு நடிக்கின்ற சிங்கள நடிகைகளோ அல்லது தொழில் செய்யும் தனி நபர்களோ எங்களது இலக்கல்ல. உண்மையில் விடுதலைப் புலிகளும் சாதாரண சிங்கள மக்கள் தங்கள் இலக்கல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் நான்காம் கட்ட ஈழப் போரில் சர்வதேச அனுமதியுடன் வகைதொகையின்றி ஈழ மக்களை சிங்கள அரசு கொன்றொழித்த போதும், விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை தாக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு இனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் சிங்கள இனத்திற்கு உள்ள பெருமைகளையும் ஏற்று கொள்கிறோம்.

இப்பொழுதும் நேர்மையான, துணிச்சலான பத்திரிக்கையாளர் என்றால் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த பெயர் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களை நினைத்தால் எரிச்சல்தான் வருகிறது. என்ன செய்ய?
-வெ.தனஞ்செயன்

Tuesday, May 18, 2010

தமிழ் திரை உலகத்திற்கு கவிஞர் தாமரையின் வேண்டுகோள்...Kavingar Thamarai : IIFA: Change the venue out of Colombo


குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்!

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!
ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப்பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!
இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560கோடி ரூபாய் தரத்தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.
2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலகசாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.
கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People's Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித்திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?
இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.
நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு
சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.
பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க செய்யாமை யானும் கெடும்
என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.
சென்னை-24
15-05-2010
தாமரை


Celebration & Entertainment in the Blood-shed Killing Fields -
Tamil Film Industry must stop this!
15/05/2010

The story of a horse kicking down the riders and burying them under a trench is
old. In the new story, the horse dances on the same burial ground. That is what is going to
be staged in Colombo on July 3rd to 5th 2010. The tyrants who murdered thousands of
Tamils in the Northern Sri Lanka have intentionally invited the International Indian Film
Academy (IIFA) awards celebrations to Colombo.
IIFA festival was originally scheduled to be held in the South Korean capital
Seoul. Indian government seems to have a hidden agenda in shifting the celebration to
Colombo. The real intention is to wipe out the blood from the hands of the Sri Lankan
government and also conceal its own sin too. The Federation of Indian Chamber of
Commerce (FICCI) also plans to use the opportunity to open the lucrative gates of the Sri
Lankan financial market. More specifically, the Indian business empire aspires to reap the
revenue from government contracts for so-called “reconstruction” of the Tamil areas. In
addition, there seems to be a competition for the emerging cell phone market.
In the three day IIFA festival, they have planned one day for exclusive film
shows! The second day for making commercial deals and the third day for 20-20 cricket!
On all three days, they want to have titillating entertainment by Indian film actrors.
What a shame!
IIFA’s first award ceremony started with London in 2000. Learning that it
generates lot of money and fame, developed countries like Canada, South Korea and
Ireland started asking for conducting this event in their countries. The countries expect
that tourism industry will thrive in their countries. There is some truth in this since 4
years back, 45 crore (450 million) people watched this event on television. IIFA is second
only to the well-known Oscar awards ceremony.
Every country was willing to pay Rs. 560 crores (~ 140 million US Dollars) to
host this event. For example, till the end of 2009, Ireland was known to be in the lead, but
South Korea overtook Ireland in the race. During the Republic Day Celebrations in India
on January 26 this year, the Indian side has officially handed over the authority to the
Guest of Honor, The President of the Republic of Korea, Lee Myung-Bak.
Till February 27, 2010, Colombo was not even in the list. Then suddenly there
was a mention of Colombo’s name. Immediately Colombo was confirmed and
Colombo’s tourism minister Achala Jagoda hailed this decision as the greatest
achievement.
Amitabh Bachchan was named as the Brand Ambassador of the IIFA festival in
Colombo. Actor Shahrukh Khan and Actress Aishwarya Rai and few other popular
Bollywoord film personalities are also supposed to join Amitabh on the stage. They are
supposed to help convince the world that “charm and peace” prevails in Sri Lanka. Just
two months back the People’s Tribunal in Dublin declared Sri Lankan government as a
war criminal. Let these actors and actresses explain the world how things changed in two
months.
We are hearing a news that Amitabh has decided to quit from this event yielding
to the requests from the Tamils, If it is true, we would be happy. Others too should quit
and facilitate moving the festival away from Sri Lanka. The latest development is that
Salman Khan is the new ambassador of the programs.
Even though IIFA has been called as international, this has been predominantly a
Hindi film festival. But this time, there has been a silent attempt to rope in Tamil film
artists. Mani Rathnam denied the news that his new film ‘Ravanan’ will be released in
Colombo.
There were media reports that Kamal Hassan, Rajini Kanth and A.R. Rehman
declined personal invites from IIFA event organisers in Colombo. Kamal Hassan is also
the chairman of FICCI’s “ Media and Entertainment Business Conclave”. It is also learnt
that Prakash Raj shouted “Do you need us (tamil actors) for conducting IIFA in tamil
blood soaked Colombo? ” while declining his invite. We wish these media reports are
genuine.
This is not enough in itself. Tamil film industry should get into action and prevent
any Indian artist from participating in IIFA in Colombo. We were not able to prevent the
slaughter of innocent Tamil civilians by Sri Lankan armed forces in Mullivaaikaal.
Atleast we should prevent these artists from celebrating over our mass graves. This will
not only sooth the troubled hearts of our Tamil brethren, this will also be a chance to
warn Colombo and Indians in complicity with this genocidal regime from hurting Tamils
sentiments.
We would not have forgotten the protests carried out by Tamil film industry to
stop the war against Tamils in Sri Lanka. Actors, film employees, television artists went
on fasting in tandem. Notably, directors Barathi Raajaa, Selva Mani, Manivannan,
Seeman and Amir did their best to spread awareness about the war among the general
public with fullest cooperation from the film industry. We should not be demoralized
over our past failures and come to a false conclusion that everything is out of our hands.
We can prevent IIFA event from taking place in Colombo. Bollywood cannot downplay
the Kollywood’s plea to change the venue of the event.
It was India which stood in forefront to isolate the racial South African
government from the international community to wipe out apartheid from the land. In
recent months, many western countries started isolating Sri Lanka economically, as a sign
of acknowledging the massacre of innocent Tamils by Sri Lakan state. Now it is the same
Indian state which does its best to prevent Sri Lanka from getting isolated from rest of the
world. This is the best opportunity for us to make the world realize the shameful
misdeeds of India. It will be of no good to miss such an opportunity and cry foul over the
missed opportunity at a later stage.
We do not remember even a single Indian sports personality who carried Olympic
torch for Beijing 2008 Olympics in India. But we, do, remember Baichung Bhutia who
refused to lift the flame as a protest against the China’s atrocities in occupied Tibet.
Bhutia could not halt the Olympics games at Beijing. But if Tamil film
personalities are determined, they can prevent IIFA 2010 from taking place in Colombo.
I request the Tamil film fraternity to join hands with me in this effort!
(Thamarai)

http://www.scribd.com/doc/31549532/Thamarai-s-Letter-to-Tamil-Film-Industry

http://www.scribd.com/doc/31549471/Thamarai-s-Letter-to-Tamil-Film-Industry-Eng

Tuesday, May 11, 2010

Monday, May 10, 2010

கொழும்பு இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கப் போவதில்லை - மணிரத்னம்....Mani says "NO" to Srilanka

ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் காட்சிக‌ள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், விழாவில் மணிரத்னம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நாம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்களான சுஹாசினியு‌ம், இயக்குனர் மணிரத்னமும் அன்னையர் தினத்தை முன்னிட்டு 83 பெண்களுக்கு தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னையில் இன்று வழங்கினர்.




இவ்விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிரத்னம், இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நான் பங்கேற்கவில்லை. மேலும், நான் இயக்கிய ராவணன் படத்தின் முழு படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ராவணன் படத்தின் சிறப்புக் காட்சிகளும் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளதே என்று கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் என் படத்தின் நடித்தவர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை‌யி‌ல் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று நான் எப்படி தடுக்க முடியும். அது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் பேகவில்லை, அவ்வளவுதான் என்று பதிலளித்தார்.


மணிரத்னம்,
மிகவும் வரவேற்கத்தக்க முடிவு...தமிழ் உணர்வாளர்களின் சார்பாக எங்களது நன்றி .

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம் - தொகுப்பு

இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடத்த முற்பட்டிருப்பது, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செய்யும் கூட்டுச் சதி என்று தமிழின அமைப்புகள் குற்றம் சாற்றின.




ஐஃபா என்றழைக்கப்படும் இந்தியா சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான தூதராக அமிதாப் பச்சன் பணியாற்றிவருகிறார்.



இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது என்று தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் இயக்கம் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொழும்புவில் விழா நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முழங்கங்கள் எழுப்பப்பட்டன.
இனப் படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க திரைப்பட விழாவா?

தமிழினப் படுகொலை நடத்தி அந்த இரத்தம் காயும் முன்பே திரைப்பட விழாவா? எனபது போன்ற எதிர்ப்பு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப்பப்பட்டன.




ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தோழர் தியாகு, இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று டப்ளினி்ல் கூடிய மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் உள் திட்டத்துடனும், அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மறைக்கும் நோக்குடனும் இந்திய சிங்கள அரசுகள் இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டமே இந்த விழா என்று கூறினார்.

இரண்டாவது உலகப் போரில் ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டதாலாயே எப்படி ஜப்பான் அழிந்துபோய்விடவில்லையோ அதேபோல், முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையால் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முடிந்துபோய் விடாது என்றும் தியாகு கூறினார்.




இன்றைய உலகில் சந்தையை குறிவைத்தே அரசியல் நடைபெறுகிறது, அதன் ஒரு வெளிப்பாடே இலங்கைச் சந்தையைக் கைப்பற்ற இந்தியப் பெரு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, அந்த வணிக நோக்கத்தனை முன்னெடுக்கவே கொழும்புவில் இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது என்று கூறிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலங்கைச சந்தையை குறிவைத்தால் தமிழகச் சந்தை பறிபோகும் என்பதை நாம் இந்த வணிகக் கூட்டங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

கொழும்புத் திரைப்பட விழாவை இந்தியாவின் அனைத்துத் திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை, மொழி, இன அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு கலை என்று ஏதுமில்லை என்று கூறினார்.




கொழும்புவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவின் நோக்க்ம வணிகம் தானே தவிர, கலையல்ல என்று கூறிய சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில், இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்துகொள்ள இந்த விழாவை ஒரு முகமாக காட்டி அதன் பின்னணியில் தங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன என்று கூறினார்.

இதில் தமிழர்களாகிய நாம் இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியை குறிவைக்க வேண்டும் என்றும், அதுவே தமிழினப் படுகொலையை மறைத்து விழா நடத்தி தனது வணிக நலன்களை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் செந்தில் கூறினார்.




இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த அந்நாட்டு அரசியல் தலைமையுடன் கைகோர்த்து தங்கள் வணிக நலன்களை மேம்படுத்திக் கொள்ள முற்படும் இந்திய நிறுவனங்களின் பொருட்களை தமிழர்களாகிய நாம் புறகக்ணிக்க வேண்டும் என்றும் செந்தில் கூறினார்.




கொழும்புவில் திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா நடந்தால், அதன்பிறகு தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்கள் ஓட அனுமதிக்கக் கூடாது என்றும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் அய்யநாதன் கேட்டுக்கொண்டார்.




இந்நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் ராம், நமது நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு சென்றாக வேண்டும் என்றார். சந்தனக்காடு தொடரின் மூலம் அப்பாவி மக்கள் பட்ட இன்னல்களைப் பதிவு செய்த்தைப் போல, வன்னியில் நடந்த படுகொலையையும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிச்சயம் தான் பதிவு செய்யப்போவதாக இயக்குனர் கெளதமன் கூறினார்.



கொழும்பு திரைப்பட விழாவில் மணிரத்தினத்தின் ராவணா திரைப்படம் திரையிடப்பட்டால் அதனை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும், அத்திரைப்பட விழாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இயக்குனர்கள் கலந்தோலாசித்து முடிவெடுப்போம் என்றும் உதவி இயக்குனர் ராம் மோகன் வர்மா கூறினார்.

நன்றி - வெப்துனியா தமிழ்

Friday, May 7, 2010

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்



மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Tuesday, May 4, 2010

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo


மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Monday, May 3, 2010

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்...Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.....

உறவுகளுக்கு வணக்கம்,

தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத இடத்தில் இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர். தமிழக இளைஞர்களின் சார்பாக நம் எதிர்ப்பை தெரிவிப்பது காலத்தின் கட்டாயம்.




விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழும உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேழம் உரு ( மே 8) | காலை கூ : ங0 (9 . 30 AM) | காரிக்கிழமை | நினைவரங்கம், சென்னை | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு

May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Friday, April 9, 2010

நளினி விடுதலையில் இருந்தது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா..?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைப்பட்டிருக்கும் நளினியை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பில் ஒளிந்திருப்பது அரசியல் சிக்கலா அல்லது சட்டச் சிக்கலா என்கிற தலைப்பில் கடந்த ஞாயிறன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.



கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் டி.அருள் எழிலன், வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு ஆகியோர் பேசினார்கள். பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவசர வேலையால் வர முடியாமல் போனதாகச் சொல்லப்பட்டது.

5 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் 6 மணிக்குத்தான் துவங்கியது. 100 பேராவது வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வலையுலகில் இருந்து வளர்மதி, பாரதிதம்பி, தமிழ்நதி வந்திருந்தார்கள். கார்ட்டூனிஸ்ட் பாலாவை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

பேசிய பேச்சாளர்கள் அனைவருமே நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்கு தமிழக அரசு தெரிவித்திருக்கும் நகைச்சுவையான சில காரணங்களைச் சுட்டிக் காட்டி படு காட்டமாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

பேசியவர்களின் பேச்சுக்களை என் நினைவில் இருக்கின்றவரையில் இங்கே எழுதுகிறேன். கவிஞர் தாமரை பேசியபோதுதான் நான் குறிப்பெடுக்கத் துவங்கியதால் கொஞ்சம் முழுமையானதாக இருக்காது. மன்னிக்கவும்..

முதலில் பூங்குழலி பேசினார்.

இவர் எழுதிய 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகம் சமீபத்தில்தான் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை மல்லிகை இல்லத்தில் வைத்து சிறப்பு விசாரணைப் படையினர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்து துன்புறுத்தினார்கள் என்பது பற்றி அந்த வழக்கில் கைதாகி பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட செல்வி என்கிற பெண் சொல்கின்ற கதைதான் அந்தப் புத்தகம். சமீபத்தில்கூட கீற்று இணையத் தளத்தில் இது பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன.

நளினியை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்து ஒரு ஆட்டோவில் வைத்து அவரை அழைத்துச் சென்றபோதே சி.பி.ஐ. அவர் மீது பாலியல் ரீதியான கொடுமையை ஆரம்பித்துவிட்டது என்று குற்றம்சாட்டினார் பூங்குழலி.

நளினிக்கு இந்தப் படுகொலை குறித்து முன்கூட்டியே தெரியவே தெரியாது என்றும், ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் இந்தத் தகவல் அவருக்குச் தெரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் தெரிவித்தார் பூங்குழலி.

நளினியை விடுதலை செய்தால் ராயப்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற காமெடியான காரணத்தைக் கிண்டலடித்தார் பூங்குழலி.

அடுத்துப் பேச வந்தார் வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்.

நளினியின் வழக்கில் இருந்த மிக முக்கியமான சட்டப் பிரச்சினைகளை எளிமையாக என்னை மாதிரியான பட்டிக்காட்டான்களும் புரிந்து கொள்ளும்வகையில் எடுத்துரைத்தார்.





நளினி உளவியல் ரீதியாக சரியாகவில்லை என்று தமிழக அரசு சொன்ன காரணத்தை மறுத்து அதற்கு உதாரணமாக சாரதா என்கிற பெண்மணிக்கு வேலூரில் நடந்த கொடுமையை வெளிப்படுத்தினார் சுந்தர்ராஜன். டிரெயினில் வந்து கொண்டிருந்த சாரதா தான் கொண்டு வந்த பெட்டி மாறிவிட்டதை உணர்ந்து அதனைத் திருப்பிக் கொடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் சென்று “இந்தப் பெட்டியைத் தவறுதலாக நான் எடுத்து வந்துவிட்டேன்.. இதை வைத்துக் கொண்டு எனது பெட்டியை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஸ்காட்லாண்டு யார்டு போலீஸாருக்கே அட்வைஸ் கொடுக்குமளவுக்கு புத்திசாலிகளான நமது போலீஸார் அந்த சாரதா மீதே திருட்டுக் குற்றம் சுமத்தி அவரை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர். அப்போது சாரதாவிடம் 5000 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சிறைக்குள் நுழைந்தவுடன் சாரதாவிடம் பணம் இருப்பதைக் கண்ட அங்கிருந்த கன்விக்ட் வார்டன்கள் அதனை தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கியிருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து சாரதா அந்தப் பணத்தை வார்டன்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் தர மறுத்திருக்கிறார்கள். உடனேயே இதை மேலதிகாரிகளிடம் சொல்லிவிடுவேன் என்று சாரதா அவர்களை மிரட்டியிருக்கிறார். இதனால் கோபமான பெண் வார்டன்கள் சிலர் ஒன்று சேர்ந்து சாரதாவை நிர்வாமணாக்கி தனி அறையில் வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இதனைத் தற்செயலாகப் பார்த்த நளினிதான் அந்த அறைக்குள் வம்பாக நுழைந்து சாரதாவை உயிருடன் மீட்டிருக்கிறார். அதோடு தன்னைப் பார்க்க வந்து தனது வக்கீலிடம் சாரதாவின் கதையைச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியர் கார்பஸ் வழக்குத் தொடர்ந்து சாரதாவின் விடுதலைக்காக உதவியிருக்கிறார் நளினி.

இந்தக் கதையைச் சொன்ன சுந்தர்ராஜன்.. “இந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மேம்பட்டுள்ளவரை அரசு ஏற்கவில்லை என்றால் இது கண்துடைப்பு காரணம்தான்..” என்றார்.

மேலும் சில நீதிபதிகளிடம் இருந்து சில நல்ல தீர்ப்புகளும், பலரிடமிருந்து எதிர்மறையான தீர்ப்புகள் வெளிவருவது இப்போதெல்லாம் அதிகரித்து வருவதாகச் சொன்னார். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் ஓரளவுக்கு நியாயமான தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

நீதிபதிகளில் சிலர் பதவி உயர்வு வேண்டியும், ஓய்வு பெற்றதற்குப் பின்னர் கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு கமிஷன் தலைவர் பதவிக்காகவும் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ளாத அளவுக்கு தீர்ப்புகளை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார். பெருவாரியான மக்களை ஊடகங்களும், அதன் முதலாளிகளும் திட்டமிட்டு திசை திருப்பிவருவதாகவும் குற்றமும் சுமத்தினார்.

இதற்கு உதாரணமாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நளினி விடுதலை பற்றிய நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது பற்றிக் குறிப்பிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் சேனலின் நிருபர் ஒரு தனி நபராகக் கருத்துச் சொல்லும்படி மீண்டும், மீண்டும் வற்புறுத்தியதை சுட்டிக் காட்டினார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே பொதுமக்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவையும் அங்கே தட்டச்சு செய்யப்பட்டு ஸ்கிரால் நியூஸாகக் காட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

அதில் நளினியைத் தூக்கில் போடு.. சாகும்வரை வெளியில் விடாதே என்பது போன்ற எஸ்.எம்.எஸ்.கள் ஓடிக் கொண்டிருந்ததையும் சுட்டிக் காட்டிய சுந்தர்ராஜன், “இவை போன்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் நளினியைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன” என்றார்.
ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்திற்கு வந்திருந்த விமர்சனங்களில் ஒன்றில் நளினியின் தன் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு அங்கஹீனப்படுத்திவிட்டு பின்பு அவரை வெளியில் விடலாம் என்று ஒரு தமிழர் எழுதியிருந்ததையும் குறிப்பிட்டார் சுந்தர்ராஜன்.

மேலும் அவர் பேசும்போது, “மக்களிடம் நளினியின் விடுதலை விஷயத்தை இன்னமும் மிக நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. மானாட மயிலாட ஆட்டத்தையும், சீரியல்களையும் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்ற இந்த சமூகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்வை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லை..

மக்கள் ஒன்றை வசதியாக மறந்துபோய்விடுகிறார்கள். இன்னைக்கு நளினி சிறையில் இருக்கிறார் 19 வருஷமா.. நாளை இது போன்ற நிலைமை நம் குடும்பத்தில் ஒருவருக்கோ.. அல்லது நமக்கோ நடக்கலாமே.. வருமுன் காப்பது நமக்குத்தானே நல்லது..?” என்று சொல்லித் தன் உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த பத்திரிகையாளர் அருள்எழிலன் துவக்கத்திலேயே காட்டமாகத்தான் ஆரம்பித்தார்.

“நளினி விடுதலையைப் பத்தி பேசும்போது எல்லாருமே ராஜீவ்காந்தி கொலையைப் பத்தியே பேசுறாங்க.. ஏன் ராஜீவ்காந்தியை கொலை செஞ்சாங்கன்றதை மட்டும் கேக்க மாட்டேங்குறாங்க..? எங்க தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்க.. கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க.. ஏன் கொன்னாங்க..?

அமைதிப்படை.. அமைதிப்படைன்னு சொல்லி ஒண்ணை இலங்கைக்கு அனுப்புனாங்க.. அந்தப் படைகளால் இலங்கையில், ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்டவர்களை யாராவது நினைத்துப் பார்த்தார்களா..? அந்த அமைதிப்படையை சைத்தானின் படைகள்ன்னு சொன்னாங்களே.. ஞாபகமிருக்கா..? அமைதிகாப்புப்படை சைத்தானின் படைன்னா அதை அனுப்புன சைத்தான் யாரு..?

பயங்கரவாதம், பயங்கரவாதக் குற்றம்னு சொல்றாங்க.. நாட்டுல ராஜீவ்காந்தி கொலை மட்டுமா நடந்திருக்கு.. இன்னும் எத்தனையோ கொலைகள் நடந்திருக்கு.. நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா அத்தனை கொலைக் குற்றவாளிகளுமா 19 வருஷம் ஜெயில்ல இருக்காங்க..? இல்லையே.. பத்து வருஷம், பதினாலு வருஷத்துல வெளில வந்தாங்களே.. நளினிக்கு மட்டுமே ஏன் விடுதலை மறுப்பு..?

நளினி விடுதலையை நாம் இப்படியே விட்டுவிடக்கூடாது.. எந்த வகையிலாவது.. நம்மால் முடிந்த வகையிலாவது ஏதேனும் ஒரு போராட்டத்தைத் துவக்கியாவது நளினியை விடுதலை செய்தாக வேண்டும்..” என்றார் அருள் எழிலன்.

அடுத்துப் பேச வந்தார் கவிஞர் தாமரை.

அமைதியாக ஆரம்பித்த இந்தப் புரட்சிப் பெண் கவிஞரின் பேச்சு போகப் போக சூடு பிடித்தது.

முதலில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக நளினிக்காக தான் ஒரு கையெழுத்து இயக்கம் துவக்கிய கதையைச் சொன்னார் தாமரை. அந்தத் தொடர்பு இருப்பதினால்தான் இந்தக் கூட்டத்துக்குத் தான் வந்ததாகவும் தெரிவித்தார்.





“அண்ணா நூற்றாண்டையொட்டி கைதிகள் விடுவிக்கபட இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டபோது நளினியின் ஞாபகம் எனக்கு வந்தது.. அவரை விடுதலை செய்ய ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தலாம் என்று எனக்குத் தோன்றியது. இதற்காக எனது நண்பர்கள்(நண்பர்களின் பெயரைச் சொன்னார். எனக்குத்தான் மறந்துபோய்விட்டது. மன்னிக்கவும்) சிலருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் உதவிக்கு வர ஒத்துக் கொண்டார்கள்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்காக எனது சினிமா பாடல் எழுதும் தொழிலைக்கூட ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு இதிலேயே மூழ்கினேன். பலருக்கும் தொலைபேசி செய்து இதைப் பற்றிச் சொல்லி அவர்களிடத்தில் அதை அனுப்பி வைத்து கையெழுத்து பெற்றேன். சிலரிடம் நானே நேரில் சென்றேன்.. கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, கவிஞர் பா.விஜய் என்று திரையுலகப் பிரபலங்களெல்லாம் கையெழுத்திட்டிருந்தார்கள்.

ஓரளவுக்குக் கையெழுத்துக்கள் கிடைத்தவுடன் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கனிமொழிக்கு போன் செய்தேன். அப்போது கனிமொழி ‘இதுக்கெதுக்கு அப்பாவை பார்க்கணும்.. டெல்லிதான முடிவு பண்ணணும்..?' என்றார். அவருக்கு நான் இது சம்பந்தமான சட்டப் பிரிவுகளை விளக்கி ‘இல்லை.. இல்லை.. ஐயாதான் செய்யணும்.. நேரம் மட்டும் வாங்கிக் கொடுங்க' என்றேன். கனிமொழியும் அதில் கையெழுத்துப் போட்டார். அதோடு கலைஞரை சந்திக்க நேரமும் வாங்கிக் கொடுத்தார்.

என்னுடைய நண்பர்களோடு கலைஞரைச் சந்தித்து அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அப்போது கலைஞர் சொன்ன பதில் என்ன தெரியுமா..? ‘சோனியாவுக்கு ஆட்சேபணையில்லைன்னா எனக்கும் ஒண்ணுமில்லைம்மா.. விட்ரலாம்..' என்றார் கலைஞர். அப்போது நான் ‘ஐயா.. இது தமிழக அரசு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது செக்ஷன்படி மாநில அரசே இதில் முடிவெடுக்கலாம்..' அப்படீன்னு சொன்னேன்.. ‘சரி.. பார்க்குறேம்மா..' என்று சொல்லியனுப்பினார். கூடவே ‘தூக்குத் தண்டனை கூடவே கூடாது.. தமிழ்நாட்டில் நீங்கள் அதனை அனுமதிக்கவே கூடாது' என்றும் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

ரெண்டு வருஷமாயிருச்சு.. ஒண்ணும் மாற்றமில்லை.. இப்போது நமது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தவுடன் மத்திய அரசின் வழக்கறிஞர் வந்து சொல்கிறார்.. ‘இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..' என்று... அப்படீன்னா நீங்க இத்தனை நாளா ‘கைதியை விடுதலை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது' என்று சொல்லி வந்தது மக்களை ஏமாற்றவா..?

பத்தாண்டுகள் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வருடாவருடம் விடுவித்த நீங்கள் 19 வருஷத்தைக் கழித்த நளினியை விடுதலை செய்ய மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டுன்னு எப்படி சொல்ல முடியும்..? ஏன் இப்படி எங்களை ஏமாத்தினீங்க..?

இடைல திடீர்ன்னு சொன்னாங்க.. ஒரு கைதி தன்னை விடுதலை செய்யக் கோரவே முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை அப்படீன்னு.. உண்மைதான். ஆனா அதே கைதி மற்றக் கைதிகளைப் போலவே தன்னையும் சமமா பாவிக்கணும்.. சமமா நடத்தணும் அப்படின்னு அரசுக்கு கோரிக்கை வைக்க உரிமையுண்டு. இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் சுப்பிரமணியசுவாமி வழக்கில் மிக முக்கிய பாயிண்ட்டா வைச்சு நளினி விடுதலை குறித்து நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆர்டர் போட்டுச்சு..

அப்புறம் நீங்க என்ன பண்ணுனீங்க..? ‘அறிவுரைக் கழகம்'னு ஒண்ணை நியமிச்சீங்க.. அது யார், யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..? வேலூர் ஜெயில் சூப்பிரடெண்ட், வேலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரி, ஒரு மனநல மருத்துவர், அப்புறம் ஒரு சமூக சேவகர்.. இவங்கதான்.. இவங்க எல்லாரும் சேர்ந்துதான் சிபாரிசு பண்ணிருக்காங்களாம் ‘நளினியை விடுதலை செய்யக் கூடாது'ன்னு..

நான் சொல்றேன்.. அந்த மனநல மருத்துவரும், சமூக சேவகரும் ‘நளினியை விடுதலை செய்யணும்'னு சொல்லியிருப்பாங்க.. ஆனா மற்ற மூன்று அரசு அதிகாரிகளும் அரசுக்கு எதிராக எப்படிச் சொல்வாங்க..? பேசுவாங்க.? ஏன்னா அரசு அறிவுரைக் கழகம் அமைக்கிறதுக்கு முன்னாடியே நளினியை விடுவிக்கக் கூடாது அப்படீன்னு ஒரு முடிவை எடுத்திருச்சு.. முன்னாடியே எடுத்த அந்த முடிவைத்தான் இப்போ அவங்க அமல்படுத்தியிருக்காங்க..

சரி.. நளினியை உள்ள வைச்சிருக்கீங்க.. அவங்க பெத்த பிள்ளை.. அரித்ரான்ற அந்தப் பொண்ணு தன் தாயைப் பார்க்க விரும்புது.. அதுக்கு அனுமதிகூட கொடுக்க மாட்டேங்குறாங்க.. இது என்ன நியாயம்..? நீங்கதான் வெளில விடலை.. சரி அதை ஒரு பேச்சுக்கு ஒத்துக்குவோம்.. ஆனா அவங்க பொண்ணையாவது வர விடலாம்ல.. ஏன் விட மாட்டேங்குறீங்க..?

இதுல ஒரு வார்த்தை(ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைச் சொன்னார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை) இந்த வார்த்தையை தமிழக அரசு கோர்ட்டில் பயன்படுத்தி வருகிறது.. ஆனால் முதல்முதல்லா இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதே சுப்பிரமணியம்சுவாமிதான். போயும், போயும் அந்தாள் சொன்ன வார்த்தையைக் கடன் வாங்கித்தான் நளினி வழக்குல நீங்க சமாதானம் சொல்லிக்கணுமா..?

நளினி செய்தது ‘தேசத்துரோகம்' என்கிறார்கள். எல்லாரும் ஒண்ணை வசதியா மறந்திர்றாங்க.. ‘நளினி செய்தது தேசத்துரோகம் அல்ல.. அவர் பயங்கரவாதியும் அல்ல' அப்படீன்னு உச்சநீதிமன்றமே தெள்ளத் தெளிவாச் சொல்லியிருக்கு.. ஏன்னா நளினியின் அண்ணன் பாக்யநாதன் தன்னோட வாக்குமூலத்துல நளினி தன்கிட்ட சொன்னதா ஒரு விஷயத்தை சொல்லிப் பதிவு செஞ்சிருக்காரு. அது ‘நளினிக்கு ஸ்ரீபெரும்புதூர் போறவரைக்கும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுகிற விஷயம் தெரியவே தெரியாது' என்பதுதான். இதை சுப்ரீம் கோர்ட்டும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டிருக்கு.. அப்புறம் இதுல எங்க இருக்க பயங்கரவாதம்.. தேசத் துரோகம்..?

‘எது பயங்கரவாதம்'..? ‘எது தேசத்துரோகம்'னு நான் சொல்லட்டுமா..? 1984-ல போபால் விஷவாயு சம்பவத்துல பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிச்சாங்களே அந்தக் கம்பெனி யூனியன் கார்பைடு நிறுவனம்.. இன்னிவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கலை.. இப்பவும் அந்த ஆலைக்கு எதிராக ஆலையின் எதிராகவே மக்கள் போராடிக்கிட்டிருக்காங்க.. அந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வாங்கித் தர முடிஞ்சதா உங்களால..?

இது போதாதுன்னு அந்தக் கம்பெனி இப்ப பெயரை மாத்திக்கிட்டு மறுபடியும் இந்தியாவுக்குள்ளே தொழில் நடத்த வந்திருக்கு. நம்ம அரசும் அதை வரவேற்றிருக்காங்க. இப்ப யாரு பயங்கரவாதி..? எது தேசத்துரோகம்..?

அடுத்தது சமீபத்துல அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம்.. இந்த ஒப்பந்தப்படி என்னன்னு பார்த்தீங்கன்னா இந்த அணுசக்தி ஆலைல ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டுட்டா அதுக்கான நஷ்ட ஈட்டை கேட்கவே மாட்டோம்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காங்க..

நாளைக்கு நிஜமாவே ஏதாவது ஒண்ணு ஆகிப் போயி, விபத்து ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்புன்னா அதுக்கு யாரு பொறுப்பு..? இது தேசத்துரோகமில்லையா..? அப்ப மன்மோகன்சிங்கை தூக்குல போட்டிரலாமா..?

‘ராஜீவ்காந்தி பெரிய தலைவர்.. அவரைக் கொன்னது தப்பு'ங்குறீங்க..? அவர் செத்துப் போய் 19 வருஷமாச்சு.. இன்னும் எந்த அடிப்படையில எந்த அடிப்படைச் சட்டத்துல அவரை பெரிய தலைவர்ன்னு சொல்றீங்க..? இன்னும் 20 வருஷம் கழிச்சாலும் ராஜீவ்காந்தி செத்தவர் செத்தவர்தான்.. அதுல ஒண்ணும் மாற்றமில்லை..

‘இவங்க செஞ்சது தீவிரவாதம்'ங்கிறாங்க.. உச்சநீதிமன்றம் என்ன சொல்லுச்சு.. ‘தடா சட்டம் செல்லாது'ன்னு ஒரு தீர்ப்பைச் சொல்லுச்சே.. அப்பவே இது ‘தீவிரவாதம் இல்லை'ன்னு ஆகிப் போச்சே.. ஆனா அப்பவே என்ன செஞ்சிருக்கணும்.. சாதாரண குற்ற நடைமுறைச்சட்டப்படி இந்த வழக்கை திரும்பவும் விசாரிச்சிருக்கணுமா இல்லையா..? ஆனா இவங்க துரதிருஷ்டம்.. ராஜீவ் கொலை வழக்கை வழக்கை தடா சட்டப் பிரிவின்படி விசாரித்தது சரிதான்னு ஒரு விதிவிலக்கு கொடுத்ததால இவங்க வழக்கை மறுபடியும் விசாரிக்க முடியாம போச்சு..

இந்த அறிவுரைக் கழகம் நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்காக சொன்ன காமெடியான அந்தக் காரணங்களை பார்ப்போம்..

நளினி படிச்சிருக்காருன்றதுக்காக அவரை விடுவிக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க.. அப்ப படிக்காம இருந்திருந்தா வெளில விட்ருப்பாங்களா..? இல்லாட்டி சிறையில் கஞ்சா வித்துக்கிட்டிருந்தா மட்டும் விடுதலை செஞ்சிருப்பாங்களா? உங்களுடைய அறிவுரைக் கழகம் என்னய்யா எதிர்பார்க்குது..?

அடுத்தது ‘அவர் மன்னிப்பு கேட்கவில்லை' என்கிறார்கள்.. நளினி தப்பே செய்யலையே.. அப்புறம் எதுக்கு அவர் மன்னிப்பு கேட்கணும்..? சரி.. அப்படியே வைச்சுக்கலாம். மன்னிப்பு கடிதம் கொடுத்தா விட்ருவீங்களா.. இப்ப நான் லெட்டர் வாங்கித் தரவா..? விட்ருவீங்களா..? சொல்லுங்க.. என்னதான் சொல்ல வர்றீங்க..?

அப்புறம் சொல்றாங்க.. அவங்க ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையெல்லாம் ஒரு கணக்குல எடுத்துக்க முடியாதுன்னு.. அப்போ தாயா இல்லாம இருந்தா விட்ருப்பீங்களா..? குழந்தைகள் விஷயத்துல இருக்கு.. இல்லை.. இந்த ரெண்டு ஆப்ஷன்தாங்க இருக்கு.. வேறென்ன இருக்கு..?

‘சட்டம் ஒழுங்கு சீர்கெடும்'னு ராயப்பேட்டை ஆய்வாளர் சொல்லியிருக்காரு.. ஆமாமா.. நளினி விடுதலையானவுடனே அப்படியே மெளண்ட் ரோட்டு பத்தி எரியும்.. ஒருத்தரும் ரோட்டுல நடக்க முடியாது.. பாருங்க.. காரணம் சொல்றாங்களாம் காரணம்..

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை..? ராயப்பேட்டைல அவர் இருக்குறதுதான் பிரச்சினைய...? வேண்டாம்.. நான் கோடம்பாக்கத்துல என் வீட்ல கூப்பிட்டு வைச்சுக்குறேன்.. வெளில விடுங்க.. நான் பார்த்துக்குறேன்.. இதுவும் பிடிக்கலையா..? வெளிநாட்டுக்கு போயிரணுமா..? என் செலவுல நான் அனுப்பி வைக்கிறேன்.. அவங்க பொண்ணு இருக்குற நாட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்.. சொல்லுங்கய்யா..

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை' என்கிறார்கள். பிரியங்கா காந்தி வந்து நளினியை சந்திச்சிட்டுப் போனப்ப அவங்க என்ன சொன்னாங்க.. ‘நளினி தான் செஞ்சதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.. வேதனைப்பட்டாங்க' அப்படீன்னு சொன்னாங்களா இல்லையா..? அப்புறமென்ன..?

இது அத்தனையும் கேலிக்கூத்து.. பச்சைப் பொய்.. முன்கூட்டியே திட்டமிட்டு நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று எழுதி வைத்துக் கொண்டு மாநில அரசு நாடமாடுகிறது. கலைஞர் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.

ஆனாலும் இன்னும் ஒரேயொரு சான்ஸ் இருக்கு.. நீதிமன்றத்தில் இப்ப நான் கேட்ட அத்தனை கேள்வியையும் நீதிபதி கேட்கத்தான் போறார்.. ஒருவேளை நீதிமன்றத்தில் இருந்து ஒரு வாய்ப்பு நமக்கு வந்தாலும் வரலாம்.. அந்த நம்பிக்கையோடு இருப்போம்..” என்று தனது நீண்ட பேச்சை முடித்துக் கொண்டார் கவிஞர் தாமரை.

அடுத்து பேச வந்தவர் விடுதலை ராசேந்திரன்.


“கருணாநிதியை சந்திக்க கனிமொழியிடம் நேரம் கேட்டபோது கனிமொழி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தாமரைதான் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.. என்ன இருந்தாலும் நம்ம எல்லாரையும்விட கனிமொழிக்குத்தானே தனது தந்தையைப் பற்றி நன்கு தெரியும். அதுனாலதான் தெள்ளத் தெளிவா ‘டெல்லிலதான அந்த மனுவைக் கொடுக்கணும்'னு சொல்லியிருக்காங்க..” என்று டைமிங் காமெடியோடு தனது பேச்சைத் துவக்கினார்.

“நளினிக்கு தன்னை விடுதலை செய்யக் கோரும் உரிமை நிச்சயம் உண்டு. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு கைதிக்கும் அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது.. ஏதோ அறிவுரைக் கழகம் ஒன்றை அமைத்தார்கள். எதற்கு அந்த அறிவுரைக் கழகம்..? அதுதான் டெல்லியிலிருந்து அறிவுரைகள் கிடைக்கிறதே.. சோனியாகாந்திதானே அதுக்கு லீடர்..?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி மாநில அரசுகள் நினைத்தால் தாங்கள் விரும்பிய கைதிகளுக்கு விடுதலை வழங்கலாம். இதற்கு எந்தவித வழிமுறைகளும் கிடையாது.. அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும் என்கிற விதிமுறையும் கிடையாது. ஆனாலும் இந்த வழக்கில் மட்டும் அறிவுரைக் கழகத்தை அமைத்துக் கொண்டார்கள். காரணம் அப்போதுதானே டெல்லியில் இருந்து வருகின்ற அறிவுரையைக் கேட்க முடியும்..?

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அரசின் ஆதரவில் ஐ.கே.குஜ்ரால் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

ஜெயின் கமிஷன் அறிக்கையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் தி.மு.க.வினருக்கும் பங்கு இருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்போது அமைச்சர் பதவியில் தி.மு.க. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் வற்புறுத்தியது. ஆனால் தி.மு.க. அதனை ஏற்கவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.. அதே காங்கிரஸ் கட்சியுடன் அல்லவா இப்போது நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்..? அதே போன்ற சூழ்நிலைக்குப் பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா?

நளினி விடுதலை குறித்து, இங்கேயிருக்கின்ற பல அரசியல் கட்சிகள்.. ஏன் இடதுசாரிகள்கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாதபோது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியமானது.

‘தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்' என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதாகூட, ஒரு பெண் என்ற வகையில்கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை' என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன்.. எத்தனையோ தேர்தல்களில் நீங்கள் தோல்வியடைந்திருக்கிறீர்கள். அப்படித் தோற்றபோது குறைந்தபட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இந்தக் குறைந்தபட்சத் தார்மீகப் பொறுப்புகூட இல்லாதபோது, நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்..?

‘பயங்கரவாதம்'.. ‘தீவிரவாதம்'.. என்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரியான டி.ஆர்.கார்த்திகேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் ‘தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது' என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காரணம் தடா சட்டத்தில் ஒரு டி.எஸ்.பி. முன்பாக ஒரு கைதி கொடுக்கின்ற வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். இந்த ஒன்றை வைத்துத்தான் அவர்கள் 26 பேருக்கும் பூந்தமல்லி செஷன்ஸ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் என்னாச்சு..? அங்கே உடைத்தெறியப்பட்டதே..

இந்திராகாந்தியின் படுகொலை நடந்தபோது டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குற்றம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?

அண்ணல் காந்தியார் கோட்சே என்னும் பார்ப்பனானால்தான் கொலை செய்யப்பட்டார். அப்போது சென்னை ரேடியோவில் இரங்கல் உரை நிகழ்த்திய பெரியார் ‘இந்தத் தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்' என்றார். கூடவே ‘தமிழ்நாட்டில் இதனால் எந்த வன்முறையும் நிகழக் கூடாது' என்றும் கேட்டுக் கொண்டார்.

இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே..?

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே திலீபன். அவருடைய உயிரைக் காப்பாற்றும்படி அப்போதைய அமைதி காப்புப் படையின் தளபதி கல்கத், அப்போதைய தூதுவர் தீட்சித்திடம் எவ்வளவோ மன்றாடியும் இந்திய ஏகாதிபத்தியம் அசைந்து கொடுக்கவில்லையே.. போராளி திலீபனின் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா? பார்ப்பனீயப் பயங்கரவாதம் இல்லையா இது..?

இப்போது ஜெயந்திரர் வழக்கில் என்ன நடக்கிறது..? அந்த வழக்கில் அரசுத் தரப்பின் முக்கியச் சாட்சியே பல்டியடித்துவிட்டார். அந்த வழக்கு விசாரணையில் தினம்தோறும் சாட்சிகள் பல்டியடிப்பதுதான் தொடர்கிறது.. இந்த இருள்நீக்கி சுப்பிரமணியனை காப்பாற்றும் நோக்கில் இந்த தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நளினிக்கு எந்த விதத்திலும் உதவ மறுக்கிறது..

நளினியை மட்டும் விடுதலை செய் என்று நாங்கள் கேட்கவில்லை. அநீதியாக சிறைக்குள் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார் என்று இந்த வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்..

பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டுகிறார் என்கிறார்களே.. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் அதற்குப் பிறகுதான் ஈழத்தில் போர் தீவிரமடைந்தது.. மே-21 அன்று ராஜீவ் நினைவு தினம் வருகிறது என்பதால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்யவேண்டும் என்பதற்காகத்தானே, மே 20-ம் தேதியன்று முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். இது திட்டமிட்ட சதி..” என்று சொல்லி முடித்தார்..

கடைசியாக தோழர் தியாகு பேசுவதற்காக வந்தார்.

பல சட்டப் புத்தகங்களில் இருந்து முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி பல்வேறு ஆதாரங்களுடன் நிறுத்தி, நிதானமாகப் பொறுமையாகப் பேசிய இவருடைய பேச்சும் அருமையாக இருந்தது.



“இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே ஒரு கைதியை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கலாம். 432-435 வரையிலான சட்டங்கள் மூலம் விடுதலை பரிசீலனை என்றால்தான் அறிவுரைக் கழகம் அமைக்கப்படுதல் வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் 161-வது பிரிவின்படிதான் நளினியின் விடுதலையை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசுதான் தேவையே இல்லாமல் அறிவுரைக் கழகத்தை அமைத்து நேரத்தை ஒப்பேற்றியது.

பொதுவாக நாடு முழுவதும் எந்த நீதிமன்றங்களும் தண்டனை காலத்திற்கு முன்பாகவே கைதிகளை விடுவித்ததில்லை.

நக்ஸலைட் கலியப்பெருமாள், அனந்தநாயகி வழக்கில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் நிருபர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவர்களது கருணை மனுவை விசாரியுங்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வேண்டுகோள்தான் வைத்தது. மத்திய, மாநில அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அந்த மனுவை தானே விசாரித்த உச்சநீதிமன்றம் கலியபெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்நாள் பிணை கொடுத்தது. அதில்தான் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தார்கள். இது ஒரு வரலாறு..

பரூவா வழக்கில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு சொன்னபோது, ‘ஒரு குற்றவாளிக்கு எட்டு ஆண்டுகள் தண்டனையே போதுமானது. அதற்கு மேல் அவனை சிறையில் வைத்தால் நாட்டுக்கும் நல்லதல்ல.. அவன் சார்ந்த சமூகத்திற்கும் நல்லதல்ல' என்று தெளிவாகவே சொன்னார்.

மிகச் சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கைதி 45 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தது தெரிய வந்து அவரை விடுவித்தார்கள். இன்னமும் சட்டீஸ்கர் மாநிலச் சிறைகளில் சிலர் விசாரணைக் கைதியாகவே 20 வருடங்கள், 25 வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏதோ ‘நளினி வெளியில் வந்தால் ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்கு கெடும்.. தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்' என்கிறார்களே.. காந்தியாரை சுட்டுக் கொன்ற வழக்கில் நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேவுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த கோபால் கோட்சேவுக்கு கொலையில் நேரடி பங்கில்லை. நளினியைப் போலவே தெரிந்து வைத்திருந்ததுதான்.

14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கோபால் கோட்சே தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆயுள் தண்டனை என்றால் அது அவர்கள் உயிருடன் இருக்கும்வரையில் சிறையில் இருப்பதுதான் என்றது நீதிமன்றம். ஆனால் அந்த கோபால் கோட்சேயை முன் விடுதலையில் விடுவித்தது அப்போதைய மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு.

செய்த கொலை தேசத்தந்தை காந்தியாரின் படுகொலை. இப்போது ஆட்சியில் இருந்ததோ காங்கிரஸ் அரசு.. ஆனாலும் கோபால் கோட்சேயை விடுவித்தது. எதனால்..? இந்த கோபால்கோட்சே வெளியில் வந்த பிறகு என்ன செய்தார்..?

அமெரிக்க டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். ‘காந்தியை கொன்றதற்கு நீங்கள் வருந்துகிறீர்களா..?' என்ற நிருபரின் கேள்விக்கு கோபால்கோட்சே பதில் சொல்கிறார் ‘நான் ஏன் வருந்தவேண்டும்..? எனக்கு துளிக்கூட வருத்தமில்லை..' என்றார். இதுவும் இந்தியாவில் கிடைத்த நீதியால் விளைந்ததுதான்.

இப்படி இந்தியா முழுவதிலுமே பல்வேறு வழக்குகளில் பல்வேறு வகையான தீர்ப்புகளும், வித்தியாசமான பார்வைகளும் வெளிப்பட்டுள்ளன. முதலில் நீதிக்கு இந்தியா முழுவதும் சமத்துவம் வேண்டும்.. நளினி வழக்கில் தமிழக அரசு திட்டமிட்டு தான் என்ன நினைத்ததோ, என்ன செய்ய நினைத்ததோ அதனை அறிவுரைக் கழகத்தின் மூலம் செய்து காட்டிவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஒரு முறை ‘தூக்குத் தண்டனை என்பது தேவைதான். ஆனால் அதனை அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பளித்திருந்தார்கள். பகத்சிங் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பகவதி தீர்ப்பு சொல்லும்போது, ‘அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றால் இது அரிதிலும், அரிதான வழக்கு என்று யார் எப்படி முடிவு செய்வது..?' என்ற கேள்வியை எழுப்பினார்.

யூகோஸ்லாவியாவின் பிரதமர் டிட்டோ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவித்தது. இதையடுத்து டிட்டோவின் மனைவியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். ‘உங்கள் கணவரைக் கொன்றவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டதே.. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று..?' அந்த அம்மையார் திருப்பிக் கேட்டார்.. ‘அதுதான் நீதிமன்றமே அவர்களை நிரபராதீகள் என்று விடுவித்திருக்கிறதே.. நீங்கள் எப்படி அவர்களை குற்றவாளிகள் என்று அழைக்கலாம்..?' என்றார். இதுவெல்லாம் வரலாற்று உதாரணங்கள்..

‘நளினி விடுதலையானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும்' என்கிறார்களே.. உச்சநீதிமன்றத்தால் முன்பு 21 பேர் விடுதலையானார்களே..? அப்போது தமிழ்நாடு என்ன பற்றியா எரிந்தது..?

முதலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை ஒரு பயங்கரவாத, தீவிரவாத வழக்காகவே பார்க்கக் கூடாது.. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளே தெள்ளத் தெளிவாகத் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘இந்திய அமைதி காப்புப்படை இலங்கைக்குச் சென்றபோது அங்கிருந்த மக்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப் பழியாகத்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இதில் எந்த பயங்கரவாதமும் இல்லை. தீவிரவாதமும் இல்லை.. தடா சட்டம் இதற்குப் பொருந்தது' என்றுதான் அவர்கள் தீர்ப்புச் சொன்னார்கள்.

நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுத்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இரண்டு நீதிபதிகள் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று சொல்ல ஒருவர் மட்டும் ‘தேவையில்லை. இதில் அவரது பங்கு மிகச் சாதாரணமானது' என்று சொல்லி நளினிக்கு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவுள்ளார் என்கிற விஷயமே ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் தெரியும் என்கிற உண்மையை எடுத்துக் காட்டிச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு நீதிபதி தனது தீர்ப்பில் நளினிக்கு ஏன் மரண தண்டனை என்கிற காரணத்தை எழுதும்போது ‘ராஜீவ்காந்தி கூடவே பதினைந்து காவல்துறையினர் இறந்து போயிருக்கிறார்களே..' என்று உருகியிருக்கிறார். ஆனால் ஈழத்தில் இந்திய அமைதிக்காப்புப் படையால் கொல்லப்பட்ட, வதைபட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி மக்களை அவர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.. அந்த ஆயிரக்கணக்கான மக்களைவிடவும் இறந்து போன காவலர்களின் உயிர் மேலானதா..?

இதே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வேறொரு செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறானது.. இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதன் பின்தான் நாட்டுக்காக நிறைவேற்றப்பட்டது என்று ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தார்.

நான் கேட்கிறேன்.. இந்தியப் பாராளுமன்றத்தில் என்றைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் முன் வைக்கப்பட்டு உறுப்பினர்களிடம் கருத்து கோரப்பட்டு நிறைவேற்றப்பட்டது? பொதுவாக நாம் வேறு நாடுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுவதில்லை. அதற்கு அரசியல் சட்டத்தில் அவசியமும் இல்லை. அரசியல் சட்ட முன் வடிவு.. திருத்தம் செய்வதாக இருந்தால் மட்டும்தான் அவைகள் அவையில் வைக்கப்படும். அப்படியிருக்க இந்த நீதிபதியின் இந்தக் கருத்து பொய்யானது.

நான் ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருந்தபோது அரசிடம் தண்டனை குறைப்பு கேட்டு விண்ணப்பித்து முறைப்படி அறிவுரைக் கழகத்தைச் சந்தித்து மனு கொடுத்து அதன் பின்புதான் விடுவிக்கப்பட்டேன். அதன் பின்பு இது குறித்து நான் எழுதிய கட்டுரையில், ‘ஐயா கலைஞரே.. நான் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டேன்.. ஆனால் என்னைவிடவும் அதிகமாக 14, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்களெல்லாம் உள்ளே இருக்கிறார்களே.. அவர்களையெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்..?' என்று கேட்டிருந்தேன். எனது கட்டுரையை ‘முரசொலி'யில் பிரசுரித்தபோது இந்த வரிகளை மட்டும் நீக்கிவிட்டு பிரசுரித்திருந்தார் கலைஞர்.

சுப்பிரமணியம் சுவாமி இப்போது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் ‘விடுதலை குறித்து சி.பி.ஐ.தான் கருத்துச் சொல்ல வேண்டும்.. மற்றவர்களுக்கு அதிகாரமில்லை' என்று.. குற்றநடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி விடுதலை கோரினால் மட்டும்தான் சிபிஐயிடம் கேட்க முடியும்.. சிபிஐ தலையிட முடியும்.. இது அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.. சுப்பிரமணியம் சுவாமியை ஆரம்பப் பாடசாலையில் போய் படித்துவிட்டு வரச் சொல்லுங்கள்..

மேலும் அரசியலமைப்புச் சட்டம் 72-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரே எந்தக் குற்றவாளியையும் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் சிறையில் இருந்து விடுதலை செய்யலாம். இது அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்துள்ள தனி சுதந்திரம்..

அப்சல்குருவின் விடுதலையின்போதும் உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக இதையேதான் சொன்னது.. ‘அப்சல் குரு எந்த தீவிரவாத அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்... அதனால் அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாய்ந்தது செல்லாது' என்றது.. அப்சல் குருவிடம் விடுதலை குறித்து கேட்டபோது, ‘விடுதலையானதில் எனக்குச் சந்தோஷம்தான்.. ஆனால் இது அநீதியானது' என்றார்.

‘கருத்து' அமைப்பு நடத்திய கூட்டத்தில் இல.கணேசன் அப்சல்குருவை விடுவித்தது தவறு என்று வாதிட்டபோது நான் இதைத்தான் அவரிடம் கேட்டேன்.. “நான் அப்சல் குரு பற்றி பேப்பரில் படித்துதான் தெரிந்து கொண்டேன்..” என்று சொல்லி நழுவிவிட்டார்.

‘ஏற்கெனவே நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கும் சூழலில் மறுபடியும் ஒரு சலுகையை அவர் பெற முடியுமா? அதனை சட்டம் அனுமதிக்கிறதா?' என்றெல்லாம் கேட்டார்கள். 164-வது சட்டப் பிரிவின்படி ஒரு குற்றவாளிக்கு எத்தனை முறைகள் வேண்டுமானாலும் தண்டனைக் குறைப்பு செய்யலாம். இப்படி ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பே உள்ளது.

‘ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தேசத் தலைவர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார்' என்கிறார்கள். ‘போபர்ஸ் திருடன், ஈழ மக்களின் துரோகி'யான ராஜீவ்காந்தியைத் தண்டிக்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. அதனால்தான் தண்டித்தார்கள். இதில் ஒன்றும் தவறில்லையே..

இன்றைக்கு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நளினி விடுதலையை ஆதரிக்கும் அமைப்பின் கடிதம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் கையெழுத்திட்டவர்களெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள்..?” என்று நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

கடைசியாக கீற்று.காம் சார்பில் பிரியா நன்றிகூற நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்தப் பேச்சில் நான் குறிப்பெடுத்ததில் இருந்துதான் எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் பெரிதும் மன்னிக்கவும்..

இதோ இன்று தீர்ப்பே வந்துவிட்டது. "நளினியை விடுவிக்கவே முடியாது!" என்று..!

இதற்கான காரணங்களாக நீதிபதிகள் சொல்லியிருப்பது, “ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.

சி.பி.ஐ. வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது.” என்பதுதான்.

இது மிகவும்அநீதியான தீர்ப்பு.. கொலை நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே தெரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக 19 வருடச் சிறைத் தண்டனை என்பது அநீதி.. அவர் ஒரு பெண்.. அதிலும் ஒரு குழந்தைக்குத் தாய் என்கின்ற ரீதியிலாவது பரிசீலித்து அவரை விடுவித்திருக்கலாம்.

ஆனாலும் எனக்கு ஏற்பட்ட இன்னொரு அதிர்ச்சி. தமிழக அரசு சொல்லியிருக்கும் 'இவன் என்னைக் கிள்ளிட்டான் ஸார்' போன்ற ஸ்கூல் வாழ்க்கை காமெடி காரணங்களை எப்படி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதுதான் தெரியவில்லை..

கவிஞர் தாமரை சொல்லியிருப்பதைப்போல் கலைஞர், டில்லி அம்மாவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என்பதற்கு மிகச் சிறந்த உண்மையான உதாரணம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனி இவர் வரலாற்று நாயகர் அல்ல.. வெறும் ஜோக்கர்தான். தலையாட்டி பொம்மை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் 'மாநில சுயாட்சி, நாங்கள் திராவிடப் பரம்பரையில் வந்தவர்கள். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு நாங்கள்தான்' என்று உதார்விட்டுக் கொண்டிருந்த இவர்களின் யோக்கியதை, கவிஞர் தாமரையின் வாக்குமூலத்தில் பல்லைக் காட்டுகிறது..!

அரசியல் காரணங்களுக்காக, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்கிற மமதையில் சட்டத்தைத் தங்கள் சுயலாபத்துக்காக திசை திருப்பும் இந்தக் கோமாளிகளுக்கு ஒரு முடிவே வராதா..?


பதிவை பிரசுரிக்க உதவிய பதிவர் உண்மைத் தமிழனுக்கு நன்றி

Tuesday, February 23, 2010

Saturday, February 20, 2010

சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி

மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது.
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் கூடிய இத்தீர்ப்பாயம் இலங்கைப் போரில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அட்டுழியங்கள் குறித்து விசாரனை நடத்தி விரிவான அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் சில பகுதிகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள்

பொதுவான பார்வையாளர்கள் முன் பல தொண்டு நிறுவனங்களும், தற்போது இலங்கையில் உள்ள 'உள்நாட்டுப் போரின்' நிலை குறித்து நிபுணர்களும் அளித்த பல அறிக்கைகளைத் தீர்ப்பாயம் கேட்டது. பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குமூலங்களை அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அவர்கள் அடையாளத்தை மறைக்க 'உள்ளக விசாரணை' முறையில் தீர்ப்பாயம் விசாரித்தது.
இந்த உள்நாட்டுப் போர் 'சாட்சிகளற்ற போர்' என்பது பல முறை தனது வேலைகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. உண்மையில், தொடக்கக் காலத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் களே. விமர்சன கருத்துக்களை ஊமையாக்க நினைத்த இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏற்ப நடைபெற்றதாகவே இவை இருந்தன. பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் சாட்சிகளின் கருத்தின் படி இது ஓர் உள்நாட்டுப் போர், இன அழிப்பை செயற்படுத்தும் ஒரு நடவடிக்கை, சொல்லப்போனால் இனப்படுகொலை என்றே கூறலாம். இதை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. மாறாக, கொள்கைகள் குறித்தும், போர், எண்ணிக்கைகள், மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன் குறித்தும் தவறான தகவல்களை கொழும்பு பரப்பியது.
இந்த தவறான தகவல்கள், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகையை குறைவாகவே கணக்கிட்டன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மிகவும் சுருங்கிய நிலையில் இறுதியாக நடந்த பாரிய இடப்பெயர்வு தொடங்கிய போதுதான், அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை எண்ணியபோதுதான் அரசு உள் ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவல் கொடுத்தது தெரிய வந்தது.


இராணுவம் மேற்கொண்ட அட்டூழி யங்கள் பொது மக்களோடு தொடர்புப் பட்டவையாகவே இருந்தன. போர் விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. சர்வ தேச சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக சில சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். காயப்பட்ட பொதுமக்களின் உடல்களில் தீக்காயங்களை பல சாட்சிகள் கண்டுள் ளனர். பிறர் நாபாம் போடப்பட்டதன் அறிகுறிகள் வெளிப்படையாக இருந்ததாக நம்புகின்றனர். வேறு பல எரியும் தன்மை யுள்ள பொருட்களுக்கான ஆதாரங்கள் இருந்ததை இம்மாதிரியானவைகளால் காயம்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக் களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரற்ற உடல்கள் காணப்பட்டதை பல சாட்சிகள் உரைத்தனர். இதன் மூலம் காயம்பட்ட பலரோடு, பொது மக்களின் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைந்த நிலையில் மனித நலன் சார்ந்த பொது கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறிவைக்கப்பட்ட வர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்விடங்களில் விடு தலைப்புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தொடர்ச்சியான எறிகணை தாக்கு தலானது ஜெனிவா ஒப்பந்த மீறலாகும். குடி நீர் பற்றாக்குறை, அடிப்படை மருத்துவ வசதிகள் இன்மை, தொடர்ந்து கல்வி வசதி கள் கிடைக்காத தன்மை ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அனைத்து அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. மேலும் இச்சூழலில் பொது மக்களின் சாவு எண் ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவ ணங்களின் படி, ஏப்ரல் 2009 வரை, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங் களின் பயன்பாடு காரணமாக ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு போரின் இறுதி வாரங்களில் மட்டும் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்ட தாக பிரித்தானிய மற்றம் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
சட்ட விரோதமான ஆயுதங்களை பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ, தமிழ் மக்களை அழித்தொழிக்க முயல்வது என்பதே ஒரு வகையான போர்க் குற்ற மாகும். ஆயுத மற்றும் அரசியல் எதிர்ப்புக் களை அடக்குவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது. நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலம் இராணுவம் முற்றிலும் பொது மக்கள் வாழ் விடங்களாக மட்டும் இருந்த பகுதிகளான மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் இடம் பெயரும் மக்கள் மற்றும் நிறைய கிராமங் கள் போன்றவற்றையே தாக்கியதாக உறுதி யாகத் தெரிகிறது. மேலும், தாமாக முன் வந்து சரணடைந்த தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கக் கைதிகள் ஆகியோர் இராணுவத்தால் கொலை செய் யப்பட்டதற்கு போதுமான ஆதாரம் உள் ளது. இது இன அழிப்புக் குற்றச்சாட்டிற்கும் சர்வதேச சட்டங்களை மீறியதான குற்றச் சாட்டிற்கும் பெரிதும் சான்றுகளாக உள்ளன.
எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன் னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பிற அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமை கள் குறித்து ஆராயவேண்டும். இடம் பெயர் 'முகாம்கள்' அல்லது 'தடுப்பு முகாம்கள்' (வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ள படி) பற்றி சாட்சிகளின் வாக்குமூலங்கள் கவனத்திற்குரியவை. தடுத்து வைக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த வீடு களுக்குத் திரும்பும் வரையிலோ அல்லது மறு குடியமர்த்தப்படும் வரையிலோ தங்குவதற்கான இடை தங்கல் முகாம்கள் என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் இம்முகாம்கள், நலன்புரி கிராமங்களாகவே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி 15 முகாம்கள் ஒதுக்கப்பட்டன. அந்த முகாம் களில் நடப்பவை தொடர்ந்து ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைக்கான அனைத்துலக அறிக்கை ஆகியவற்றை மீறுபவையாகவே இருக்கின்றன. அந்த முகாம்களுக்குள் நடந்த பல வேதனை யான நிகழ்வுகள் குறித்து தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஒருவருக்கு ஒதுக்கப்படும் வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, சரும நோய்கள் ஏற்படு கின்றன. பலர், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் வயதானவர்களும் காலரா, மற்றும் சத்துக் குறைவினால் மரணமடைந்திருக்கின்றனர். நீர் வழங்கல் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இது போதாதது மட்டுமல்ல, சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுத்தது. அடிப்படை சுகாதாரம், கழிவறை பயன்பாடு மற்றும் துணி துவைப்பதற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. அதிலும் பெரும் பாலானவர்களுக்கு உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. குப்பைகள் அந்தந்த இடங்களிலேயே கிடந்தன. கழிவுத் தொட்டிகள் சிமெண்ட்டால் கட்டப்படாததால் அடிக்கடி உடைந்து, கழிவு நீர் வெள்ளமாக வெளியேறி, சில சமயங்களில் சில குழந்தை கள் அவற்றில் மூழ்கி இறக்கும் அளவிற்கு இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்று இருக் கின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவரின் ஆதரவில் மட்டும் உள்ளனர். இதனால் முகாம்களில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேர்கிறது.

ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மற் றொரு அரசுக் கொள்கை என்னவெனில், தமிழ் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களைப் பணிய வைக்கும் ஆயுதமாக உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. உணவு வழங்கலை தடை செய்தது, மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவை ஆபத்தான உணவுப் பற்றாக்குறைக்கு வழிகோலின. அதோடு கூடுதலாக தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து வழங்கலையும் தடை செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் மனித உரி மைச் சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.
அழிக்கப்பட்ட கிராமங்களிலும், 'நலன்புரி கிராமங்களிலும்' அரசு இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன் கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் அரச படையால் தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றுமொரு பாரிய கொடுமையாகும். மனித குலத்திற்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிக்கப்படும் இது, கருக்கலைப்பு, குடும்ப பெருமைக்கு இழுக்கு, அவமானம், மன உளைச்சல்களு டன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்டது பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மேலும் பல துயரங்களுக்கு வித் திட்டது. இப்படி குறிவைத்து நடத்தப்படும் கொடுமைகளுக்குப் போர்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களும் பலியாயினர். பெரும் எண்ணிக்கையில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவிர, கடத் தல், படுகொலை, முன்அறிவிப்பற்ற கைது கள், தடுத்து வைத்தல், பாலியல் வன்கொடு மைகள் மற்றும் சித்ரவதைகள் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரமும் நடந்தது.
மேலே உள்ள பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை, மனித உரிமை கண்காணிப்பகம் (28.07.2009 மற்றும் 24.11.2009), சர்வதேச மன்னிப்பு சபை (10.08.2009) மற்றும் கொள்கை மாற்றுகளுக்கான மய்யம் (செப்டம்பர் 2009) ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலாம்.
தமிழ்த் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்தல் மற்றொரு கொடுமை யாக இருந்தது. அதிலும் இப்படியான படு கொலைகளில் முக்கியமாக இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி. மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டது முக்கியமானது.
விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என அறிவித்த 1979-இன் பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் பல்வேறு கொடுமை களுக்கு வழிவகை செய்த அரசின் கொள்கைகளுள் முக்கியமானதாகும். அது சட்டத்திலும் இராணுவ சட்ட அமைப்பிலும் உள்ள பாதுகாப்புகளைக் குறைத்து அவற் றைப் தவறாக பயன்படுத்த வழி செய்தது.
இறந்தவர்களின் உடல்கள் அவமரி யாதை செய்யப்பட்டதும் சாட்சிகள் மூலம் தெரிய வருகிறது.
சுருக்கமாக, விடுதலைப் புலிகள் படையினரின் அச்சுறுத்தலை நீக்கவும், தமிழ் மக்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவும், இலங்கை அரசு, உலகளாவிய சட்டங்கள், ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றிற்கு எதிரான ஓர் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால் விளைந்த கொடுமைகளான வல்லுறவு, சித்ரவதை, படுகொலைகள், 'காணாமல் போதல்', மற்றும் உணவு, நீர் மற்றும் மருந்து வழங்கலை தடை செய்தமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. கனரக ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களான வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கொத்து குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியதானது உலகளாவிய சட்ட நிலைகளுக்கு அப்பால் இலங்கை அரசை நிறுத்தியுள்ளன. வன்கொடுமைகள், இன அழிப்பு, சொல்லப் போனால் இனப் படு கொலை ஆகிய குற்றங்கள் கொழும்பில் திட்டமிடப்பட்டன என்பது ஆச்சரியமளிக்க வில்லை. போர்க் குற்றங்களும், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களும் நடந் துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், நிபுணர்களின் வாக்குமூலங்கள், ஊடக அறிக்கைகள் என இத்தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப் படையில் கடந்த 2002 முதல் (போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து) இன்று வரை இலங்கை அரசால் மூன்று வகையான மனித உரிமை மீறல்கள் செய் யப்பட்டுள்ளன என நாங்கள் வரையறுக்கிறோம்.
• தமிழ் மக்களைக் குறி வைத்து நடத் தப்பட்ட வலுக்கட்டாயமாக 'காணா மல் அடித்தல்'
• போர் மீண்டும் தொடங்கிய பிறகு நடந்த குற்றங்கள் (2006-2009), குறிப் பாக போரின் இறுதி மாதங்களில்.
• இராணுவ இலக்குகள் அல்லாத மக் களின் பொது கட்டமைப்புகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய வற்றின் மீது குண்டுவீச்சு நடத்தியது
• அரசு அறிவித்த 'பாதுகாப்பு வளையங்கள்' மற்றும் 'தாக்குதலற்ற பகுதிகள்' மீது குண்டுவீச்சு நடத்தியது
• போர்ப் பகுதிகளில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளைத் தடுத்தது
• கனரக ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களை பயன் படுத்தியது
• உணவு மற்றும் மருந்தை போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது
• கைது செய்யப்பட்ட அல்லது சரண டைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை மோசமாக நடத்தியது, சித்ரவதை செய்தது மற்றும் கொலை செய்தது
• சித்ரவதை
• பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வல்லுறவு
• தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுகட்டாயமாக வெளியேற்றியது
• இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்தியது
• போரின் போதும் அதற்குப் பிறகும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்
• தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை சுட்டுக் கொலை செய்தது
• வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
• வல்லுறவு
• சத்துக்குறைவு
• மருத்துவ உதவிகள் பற்றாக்குறை
போர்க் குற்றங்கள்

மேலே 2ஆவதாக குறிப் பிட்டுள்ள செயல்களானது இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆயுதப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் வரை யறுக்கப்பட்டுள்ள 'போர்க் குற்றங்களை' புரிந்துள்ளதை தெளிவாக்குகின்றன. ரோம் சட்டத்தின் பிரிவு 8 கீழ் வருமாறு கூறுகிறது:
இந்த போரானது நாடுகளுக்கு இடையிலானது என்றால் கீழ்க்காணும் குற்றச்சாட்டுக்கள் பொருந்தும் :
(b) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடை யிலான போர்களில் பின்பற்றப்பட வேண் டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(ii) இராணுவ இலக்கல்லாத பொது கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது
(iii) தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய இராணுவ இலாபத்தை விட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்துவது, பொது கட்ட மைப்புகள் பொது மக்கள் உடைமைகள் ஆகியவற்றை பரவலாக சேதப்படுத்து வது, இயற்கை சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்து வது ஆகியவை
(vi) ஆயுதங்களை கைவிட்டு விட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல் லது தாமாக முன் வந்த சரணடைந்த ஒருவரை கொல்வது அல்லது காயப் படுத்துவது
(ix) மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப் பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த கட்ட டங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம் பட்டவர்களோ நோய் வாய்ப்பட்ட வர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(xxi) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(xxii) வல்லுறவு, பாலியல் அடி மைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க)-இல் குறிப்பிடப் பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
(xxv) ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட் களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது உட்பட பொது மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை தடுப்பதன் மூலம் பட்டினியை போரில் ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது
மோதல் உள்நாட்டுத் தன்மையு டையதாயின் கீழ்க்காணும் குற்றச் சாட்டுக்கள் பொருந்தும்
(c) சர்வதேச அளவில் அல்லாத ஆயுத மோதலெனில், 12 ஆகஸ்ட் 1949 தேதியிட்ட 4 ஜெனிவா ஒப்பந்தங்களில் பொதுவாக உள்ள பிரிவு 3-அய் மீறுவ தானது, மோதலில் நேரடி பங்கு கொள்ளாத வர்கள், அவர்கள் ஆயுதப் படையின் பகுதியாக இருந்தாலும், ஆயுதத்தை கைவிட்டவர்கள் அல்லது நோய், காயம் அல்லது தடுத்து வைப்பு அல்லது பிற காரணங்களுக்காக போரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக கீழ்காணும் செயல்களை செய்வதாகும்.
(i) உயிருக்கும் மனிதர்களுக்கும் எதிரான வன்முறை,- குறிப்பாக எல்லா வகையிலான கொலைகள், சிதைத்தல், கொடூரமாக நடத்துதல் மற்றும் சித்ரவதை
(ii) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(iii) பணயக் கைதிகளாக பிடித்து வைத்தல்
(iv) நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அனைத்து சட்டப்பூர்வ மாக பாதுகாப்புகளும் வழங்கப்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட ஒரு முன் னோடி தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள்
(c) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையில் அல்லாத போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(iv) மதம், கல்வி, கலை, அறிவி யல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக் கப்பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கட்டடங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ நோய் வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(vi) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
எனவே, இலங்கையில் நடை பெற்ற போரை சர்வதேச அளவிலானது என்று கருதினாலும் உள்நாட்டுப் போர் என்று கருதினாலும் இலங்கை அரசு புரிந்துள்ள போர்க் குற்றங்களை நாம் தெளிவாக கண்டுள்ளோம்.
மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள்




முதலாவதாகவும் (வலுக்கட்டாய மாக காணாமல் அடித்தல்) மூன்றாவதும் (இடம் பெயர் முகாம்களில் போரின் போதும் அதற்கு பிறகும் நடைபெற்ற மீறல்கள்) குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது, ரோம் சட்டம் பிரிவு 7-இல் கொண்டுள்ளபடி தெளிவாக மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களாகும். அதிலும் குறிப்பாக கீழ்காணும் பிரிவு களின்படி :
கீழ்காணும் ஏதேனும் செயல்கள், ஒரு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதலின் பகுதியாக, ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது, தெரிந்தே நடத்தப் படுமாயின் :
(a) கொலை
(b) படுகொலை
(d) வெளியேற்றுதல் அல்லது மக்களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல்
(e) உலகளாவிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அடிப்படை சட்டத் திட்ட ங்களை மீறி சிறை வைத்தல் அல்லது நடமாட தடை விதித்தல்
(f) சித்ரவதை
(g) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச் சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) -இல் குறிப் பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள்
(h) ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது பத்தி 3-இல் விளக்கப் பட்டுள்ள படியான அரசியல், மரபின, இன, பண் பாட்டு, மத, பாலியல் அல்லது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அடிப்படை களில் உள்ள ஒரு கூட்டத் தினர் மீது நடத் தப்படும் வன்கொடு மைகள் அனைத்துல கச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாது.
(i) வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
(k) பெரும் துன்பத்தையோ அல்லது பெரும் உடல் காயத்தையோ அல்லது உளவியல் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய இதையொத்த பிற மனிதத்தன்மையற்ற செயல்கள்.
இனப் படுகொலை எனும் குற்றத்தை செய்திருப்பதற்கான சாத்தியங்கள்

இனப்படுகொலை குற்றச்சாட்டை விசாரிக்க தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை எனினும், வாக்கு மூலங்கள் அளித்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை நடந்தது அல்லது நடந்திருக்கலாம் என் பதை அங்கீகரிக்குமாறு கூறினர். போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கு எதி ரான குற்றத்துடன் இனப்படுகொலைக் குற்றச் சாட்டையும் இணைக்கும் அளவிலான ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப் படவில்லை. சில உண்மைகள் அவை இனப்படுகொலைச் செயல்களாக இருக்கக் கூடும் என்ற அளவில் முழுவதுமாக ஆரா யப்படவேண்டும். அப்படியான உண்மை களில் கீழ்காணுபவையும் அடங்கும் :
- 'ஒரு குழுவினர் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை' அழிக்க என்று லெம்கின் கூறியது போல் (இங்கு தமிழ்க் குழுவினர்) தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக (ஊடகவியலாளர்கள், மருத்து வர்கள், அரசியல்வாதிகள்) இலங்கை ஆயுதப் படையினரும், அரசின் ஆதர வோடும் வழிகாட்டுதலோடும் செயல் பட்ட துணை இராணுவக் குழுவினரும் மேற்கொண்ட தனிநபர்களை வலுக் கட்டாயமாக 'காணாமல் போகச்' செய்த முறை
- இடம் பெயர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலை தொடர் வது. சுட்டுக் கொல்லப்படுதல், திட்ட மிட்ட வல்லுறவு, வலுகட்டாயமாக 'காணாமல் போகச் செய்தல்'. நாட்டில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பரவலாக அழிக்கப் பட்ட கட்ட மைப்புகள். தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவை களான உணவு, மருந்து போன்ற வற்றிற்கு பற்றாக்குறை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போதைய நிலை என்றாலும், அவற்றை குற்றச்சாட்டுகளில் இணைக்க போதுமான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்க வில்லை. எனினும், இனப்படு கொலை நடந்திருக்கலாம் என்ற நோக் கில் தொடர்ந்த விசாரணையை மேற் கொள்ள வேண்டியதன் முக்கியத் துவத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்கிறது.
மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இருக்க எந்த ஒரு மனிதனுக்கும் உள்ள உரிமை
'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்' என்று சொல்லப் படுகிற விசயமானது, இத்தகைய போர்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலும், மிக ஆபத்தான ஓர் எதிரியை அழிக்க வல்ல சிறந்த வழியாக கருதப்பட்டு அனுமதிக் கப்படவேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. இந்த புதிய பாதுகாப்பு மாதிரியானது, மக்களில் 'பயங்கரவாதிகள்' என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நியாயப் படுத்துகிறது. 'பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புரிந்த குற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களும் மனித உரிமை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள் என்பது இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அடிப்படை யான கருத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் எந்த ஒரு குற்றமும், இத்தீர்ப் பாயத்தினால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு போர்க் குற் றத்தையும் அல்லது மனிதக் குலத்திற்கு எதிரான குற்றத்தையும் நியாயப்படுத்த முடியாது.
இதனை முக்கியத்துவப்படுத்து வதன் காரணம் என்னவெனில், இந்த புதிய பாதுகாப்பு மாதிரிக்குள், 'பயங்கர வாதிகள்' அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரைக் குத்தப்பட்ட மக்கள், ஒட்டு மொத்த மனித குலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.
சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு

தீர்ப்பாயத்திடம் இறுதியாக அளிக் கப்பட்ட குற்றம் - 'சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்'. இலங்கை அரசும் அதனுடன் வேறு சில அந்நிய சக்திகளும் இணைந்து ஒரு வெறுப்புக் கொண்ட போரையே நடத்தின என்று குற்றம்சாட்டப்படுகிறது. நூரெம்பெர்க் தீர்ப்பாயத்தில் சமாதானத் திற்கு எதிரான குற்றங்கள் விளக்கப்பட்டுள் ளன : (அ) வெறுப்பின் மீது கட்டமைக்கப் பட்ட ஒரு போரையோ அல்லது சர்வதேச ஒப்பந் தங்கள், உடன்பாடுகள், அல்லது வாக்குறுதிகள் ஆகியவற்றை மீறிய ஒரு போரையோ நடத்த திட்டமிட்டு, ஆயத்த மாகி, தொடங்கி நடத்துவது (ஆ) அப்படியான செயல்களை முடிப்பதற்கான ஒரு பொதுத் திட்டத்திலோ அல்லது சதித் திட்டத்திலோ பங்கேற்பது.
இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள் வதில் தீர்ப்பாயத்திற்கு உள்ள சிக்கலானது - தீர்ப்பாயத்தின் முன் இக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வைக்கப் பட்ட சாட்சியங் களால் மட்டுமல்ல - ஆனால் கூடுதலாகவும் முக்கியமாகவும், இக்குற்றச்சாட்டை மனித உரிமைச் சட்டங்களின் பகுதியாக ஏற்றுக் கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
சமாதானத்திற்கு எதிரான குற்றம் என்பது, சமாதானம் நிலவும் சூழலில், இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வன் முறை யான ஒரு போரைத் தொடங்குவ தன் மூலம் இந்த சமாதானச் சூழலை உடைப்பது.
என்றபோதும், மனித குலம் அவலத்தை எதிர்நோக்கிய பெரும்பாலான ஆயுத மோதல்களில் ஒரு குழப்பமான மற்றும் சிக்கலான நோக்கிலிருந்து சூழலை ஆராயலாம். ஒரு போரில் முதன் முதலில் தாக்குதலைத் தொடங்கியவர் யாரென முடிவு செய்வது கடினமானது மட்டுமல்ல சார்பானதாகவும் ஆகிவிடுகிறது. ஒடுக்கு முறையானது பல ஆண்டுகள் சேர்ந்து கொண்டே போய் ஒரு இக்கட்டான நிலையில் வினையாற்றும் போது அது ஒரு வன்முறைப் போரின் தொடக்க செயலாகி விடுகிறது.
இதுதான் இலங்கையில் பல ஆண்டுகள் நடந்த போரின் நிலையும். எந்த பக்கம் நின்று இந்த மோதல் ஆரா யப்படுகிறது என்பதை பொருத்து யார் 'சமாதானத்திற்கு எதிரான குற்றத்தைப்' புரிந்தனர் என்பது முடிவாகும். அதனால் தான் இக்குற்றத்தைப் பொருத்த வரையில் தீர்ப்பாயம் குறிப்பானக் குற்றச்சாட்டுக்களை ஏற்கவில்லை.
இருந்தபோதும், கிடைத்த ஆதா ரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப் படையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பை உணரும் அதே வேளை யில், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித காத்திரமான முன்னெடுப்பு களையும் அது மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் அது புறந்தள்ளிவிட்டது என்பதையும் உணருகிறது.
போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை நிறை வேற்றாது விட்ட அய்க்கிய நாடுகள் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு இத்தீர்ப்பாயம் அந்த பொறுப்பினை வலியுறுத்துகிறது. தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோச மான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடு களின் அழுத்தம் காரணமாக, அய்.நா மனித உரிமைகள் ஆணையமும், அய் நா பாதுகாப்பு ஆணையமும் நடந்த கொடுமைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான ஆணை யத்தை அமைக்கத் தவறி விட்டன.
2002-இன் போர் நிறுத்த ஒப்பந் தத்தை அய்ரோப்பிய ஒன்றியம் வலு விழக்கச் செய்ததையும் இத்தீர்ப்பாயம் முன்னிறுத்துகிறது. ஒரு சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்த நிலையிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக் கிய தமிழ்ப் போராட்டக் குழுவினை பயங்கரவாதிகள் இயக்கமென பட்டியலிட அய்ரோப்பிய ஒன்றியம் 2006-இல் முடிவெடுத்தது. இந்த முடிவானது, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற் கொள்ள அனுமதித்தது. அதன் விளைவாகவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான மீறல்களும் நடை பெற்றன. அதோடு தமிழர்களை குறி வைத்து நடத்தப்பட்ட ஒரு போரில் இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகள் ஆகியவற்றின் நடத்தைகளுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தன் முழுப் பொறுப்பையும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை' நடத்தும் அமெரிக்கா தலைமையிலான நாடு களையே சாரும் என தீர்ப்பாயம் சுட்டிக் காட்டுகிறது.
அதோடு, இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியதற்காக பல நாடுகளுக்கு நேரடி பொறுப்பு இருப்பதையும் இத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. இதில் சில ஆயுதங்கள் 'சில மரபு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தம்' போன்ற பல ஒப் பந்தங்களினால் தடை செய்யப்பட்டுள்ளன. அதோடு இதில் சில நாடுகள், போர் நிறுத் தக் காலக்கட் டத்தில் இலங்கை இராணுவப் படையினருக்கு பயிற்சியும் அளித் திருக்கின்றன.
இலங்கை அரசுக்கு

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசுக்குக் கீழ்காணும் பரிந்துரைகளை செய்கிறது :
- 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்களில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பிலும் புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் மற்றும் போர்க் குற்றங் களையும் விசாரிக்க உடனடியாக, சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான அதிகார முடைய 'உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்' ஒன்றை அமைத்து, போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்வதன் மூலமும், 1979-இன் பயங்கரவாத தடுப்புச் சட் டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமும் தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.
- 12,000-க்கும் அதிகமான அரசி யல் கைதிகளின் பாதுகாப்பையும் கெளர வத்தையும் உறுதி செய்து, உலகளாவிய நடைமுறைகளின்படி அவர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தி னர் சந்திக்கவும் சட்டப் பூர்வமாக தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
- உள்ளுர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமை காப் பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற் றும் சுதந்திரமாக செயல்படும் தன் மையை உறுதிப்படுத்துவதோடு அவர் களின் சட்டப் பூர்வமான மனித உரிமை களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
- அனைத்து துணை இராணுவக் குழுக்களையும் கலைத்துவிட்டு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவப் படைகளின் இருப்பை குறைக்க வேண்டும்.
- வடகிழக்கின் நிருவாகம் மற்றும் மேலாண்மையில் தமிழர்களுக்கு செயல் படத்தக்க சட்டப்பூர்வமான பங்கெடுப் பினை வழங்கக் கூடிய அரசியல் அதி காரப் பங்கீட்டுத் தீர்வை நடைமுறைப் படுத்தி, சம குடியுரிமைக்கு அவர் களுக்கு இருக்கும் உரிமைகளை ஏற்றுக் கொண்டு, அனைத்து நிலைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவும் பிரதிநிதித்து வப்படுத்தவும் வாய்ப்பு வழங்கி, மே 2010-இல் நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தல் சுதந்திர மாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற உறுதிப்படுத்த வேண்டும்.
- அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை ஏற்படுத்தக் கூடிய ரோம் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முகாம்களில் உள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை பொருத்த அளவில் 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்' கீழ்காணுபவற்றை பரிந்துரைக்கிறது :
- அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற மனித நேய அமைப்புகள் சுதந்திரமாகவும் தடையின்றி யும் முகாம்களுக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
- முகாம்களை இராணுவத்திட மிருந்து சிவில் நிருவாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்க ளின் முழு ஒத்துழைப்புடன் பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிருவாகத்தில் தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
- அய் நாவின் உள்நாட்டில் இடப் பெயர்விற்கான வழிகாட்டு நெறி முறைகள் போன்றவற்றில் கூறப்பட் டுள்ள தரத்தில் பாதுகாப்பாக திரும்பவும், திரும்புபவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு செயல்களை சுதந்திரமான பன்னாட்டு கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.
- பாதிப்புக் குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற் கொண்டு, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து சரியான மதிப்பீட்டிற்கு பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
- பெண்கள், குழந்தைகள், பிரிந்து விட்ட குடும்பங்கள், அடிப்படை சேவை கள் சென்றடைதல், போருக்குப் பின் னான புனர்வாழ்வு, கல்வி மற்றும் உடல் நலன் மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம் மற்றும் மனப் பிறழ்வுக் கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் ஆகிய வற்றை குறிப்பாக கவ னிக்க வேண்டும்.
உலக சமூகம், நிதியளிக்கும் அரசுகள் மற்றும் அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கு

மேற்கூறப்பட்டவர்கள் கீழ்காணு பவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் வேண்டுகிறது
• மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து அதற்குப் பொறுப்பாளர்களை அடையாளம் காண இலங்கைக்கென அய்நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
• போர் நிறுத்த ஒப்பந்த சீர்குலைவுக்கும் அதனைத் தொடர்ந்த போர்க் குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதி ரானக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் உலக சமூகம் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதையும், போர் நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியமை குறித்தும் விசாரிக்க பொறுப்பான, புகழ் பெற்ற தனி நபர்களைக் கொண்ட ஒரு சுதந் திரமான குழுவை அமைப்ப தற்கு துணை நிற்க வேண்டும்.
• தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மீட்க மேற்கொள்ளப் படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திர மாக கண்காணிக்க அய் நா மனித உரி மைகள் ஆணையத்தின் செயல் அலு வலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
• அமைதி மற்றும் போர் நிறுத்த நட வடிக்கைகளையும், கண்ணி வெடி அகற்றல், புனரமைப்பு, தமிழர்களின் விருப்பம் மற்றும் விருப்பத்திற்கேற்ற போருக்குப் பின்னான மறு கட்ட மைப்பு ஆகியவற்றிற்கு துணையாக நிதியளிக்கும் நிறுவனங்களின் நட வடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பன்னாட்டு மற்றும் கூட்டு நடவடிக் கைப்படை ஒன்றை உருவாக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் நிலைத்த வாழ்விற் கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமானவற்றை அளிக்க வும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக் கும் இடையே பண்பாட்டுப் பகிர்வு மற்றும் உரையாடல்களுக்கும் வழி வகுக்கக் கூடிய நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டும்.
• சுனாமி நிவாரணம் மற்றும் பேரவலத் திற்குப் பின்னான மறு கட்ட மைப்புக் காக வழங்கப்பட்ட பன் னாட்டு அவசர கால மற்றும் வளர்ச்சி நிதிகளின் இறு திப் பயன்பாடு மற்றும் சரியானபடியான மறுபகிர்வு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• 2010-இல் நடக்க இருக்கிற நாடாளு மன்றத் தேர்தலை கண்காணிக்க ஒரு சிறப்பு பன்னாட்டு தேர்தல் கண் காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
• இலங்கை சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12,000 அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இறுதி குறிப்புகள்

தங்களுடைய வாழ்வை மிக ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்து விட்ட உண்மைகளை வாக்குமூலங் களாக அளிக்க துணிச்சலுடன் முன் வந்த நேரடி சாட்சிகளின் அடிப்படை பங்களிப்பை குறிப்பாக அங்கீகரிக்காமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது பணியை முடிக்க இயலாது. எண்ணற்ற அளவில் பாதிக்கப் பட்ட மக்களின் சரியான பிரதிநிதிகள் இவர்களே. அவர்களின் துன்பத்தை முழுமையாக விவரிக்கவே இயலாது. அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அங்கீகரிப்பதுமே நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இருப்பிற்கும் செயற் பாட்டிற்குமான காரணங்கள்.
தங்கள் நாட்டில் நடந்த கொடு மைகளை நேரடியாக கண்டவர்கள், தற்போதைய சூழலில், அவர்களது சுதந் திரம் மற்றும் உயிர் மீது நேரடியாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் மூலமாகவோ அவர்களது உரிமைகள் மேலும் பறிக் கப்படலாம் என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நன்கு அறிந்திருக்கிறது.
எனவே எங்களிடம் வாக்கு மூலங்கள் அளித்தவர்களுக்கோ அல் லது அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதே னும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி களும், குற்றம் புரிந்தவர்களுமே முழுப் பொறுப்பு என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிக்கிறது. தீர்ப்பாயத்தின் உண்மை அறியும் முயற்சிக்கு துணிச்சலுடன் தங்கள் பங்களிப்பை நல்கிய சாட்சிகளின் பாது காப்புக் குறித்து சீரிய கவனம் செலுத்து வதை எங்கள் முக்கிய கடமையாக ஏற்கி றோம். அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால், அதற்கு இலங்கை அரசே பொறுப்பென நாங்கள் உறுதிபட கூறுகிறோம்.
எங்கள் பணிக்கும் திட்டங்களுக் கும் பங்களிப்பை நல்கியதற்காக சாட்சி கள் துன்பப்படும் எந்த விளைவையும் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நேரடியான பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உறுதி கூறுகிறது